|
255. பார்ப்பார் யார்? |
|
சித்தார் வண்ணம் |
ப. |
| பார்ப்பார் யார் - தமிழ்ப் | | பாரினில் தமிழ்நூல் பார்ப்பவரே - பிறர் | | பார்ப்பனர் ஆகார் பார் பார் பார். |
|
து. ப. |
| குரு - போற்றியே உவச்சன் பூசாரி | | திரு - புலவன் பண்டாரம் ஆசிரியன் | | உருத் - தேற்றியே ஓதுவான் நம்பி | | எனத் - திகழும் இல்லறத்தார் தான்பார்ப்பார். (பார்ப்பார்) |
|
256. அந்தணர் யார்? |
|
'வண்ணப் புறாவே நீ யார்' என்ற மெட்டு வகை |
ப. |
| அந்தணர் என்பவர் யார் - அருள் | | அறியாத பேரையே தெரியாது கூறுவீர். |
|
து. ப. |
| செந்தமிழ் மாமரபே - மெய்யாய்ச் | | செப்பாத நூற்படி தப்பாகக் கூறாதீர் (அந்தணர்) |
|
உ.1 |
| வெந்தன்மை நீங்கியே எந்த வுயிருக்கும் | | செந்தண்மை பூண்டோர்தாம் அந்தண ராவாரே | | வந்த விருந்தினரை - வெளி | | வாயிற்காக்க வைத்தே மீயுஞ்சோற்றைக் கொட்டார் (அந்தணர்) |
|
2 |
| நாய்போற் பெற்றதுண்டு தாய்போற் பெண்டிர்க்கொண்டு | | பேய்போல் திரிந்தெங்கும் சேய்நிகர்ப்பார் ஐயர் | | நாயகராய்ச் செருக்கித் - தம்மை | | நானிலம் வந்துள்ள வானவர் என்னாரே (அந்தணர்) |
|