|
254. பாங்கன் கழறலும் தலைவன் கழற்றெதிர் மறுத்தலும் |
|
(திருக்கோவை, 20, 21, 22, 23) |
(இசைந்த பண்ணிற் பாடுக) |
பண் - காப்பி தாளம் - முன்னை |
1. பாங்கன் வினவல் |
| தகை - வாடுகின்றதும் ஏனே | | தமிழ் - வயத்ததோ மனம் கோனே | | இனிப் - பாடும் இன்னிசை யானே | | இந்தப் - படியோ சொல்தணிப் பேனே. |
|
2. தலைவன் விடுத்தல |
| மலஞ் - சோலை யோரிள மானே | | கண்டு - சோர்ந்த தென்மனம் தானே | | முந்து - காலை இறைவனின் மேனே | | முழுக் - கருத்தும் செலுத்துவென் நானே. |
|
3. பாங்கன் கழறல் |
| ஒரு - சோலை யிற்சிறு மானே | | கண்டு - சோர்ந்த னைபெரு மானே | | முனம் - மேலெ னும்அறி வானே | | மதி - மிகவும் கூறுவை நீனே. |
|
4. தலைவன் கழற்றெதிர் மறுத்தல் |
| இனித் - தோழ நான்என்ன செய்வேன் | | காணாத் - தொலைவில் நின்றுநீ வைவேன்? | | இந்த - வேளை நீசெலின் உய்வேன் | | இன்றேல் - விரைந்துயிர் இங்கே பெய்வேன். |
|
வைவு + ஏன்? = வைவேன்? |