|
உ. 1 |
| மாலவர் அனுமந்த ராயற்கும் அங்கம்மைக்கும் | | மாடப்பள்ளி யில்முதல் மகனெனத் தோன்றினரே | | காலமே கல்விகற்றுக் கற்பிப்புப் பட்டம்பெற்றுக் | | கணிதநல் லாசிரியப் பணிசெய வூன்றினரே. (சேலங்) |
|
2 |
| வாணியம் பாடிக்குப்பின் சேலங்கல் லூரியிரு | | பானொடுமூன் றாண்டாகப் பதிந்திரண்டாம் நிலையை | | மாணவே முதலென மாற்றியேழை மாணவர் | | மாபெருந் தொகையராய்த் தேறச்செய்தார் கலையே. (சேலங்) |
|
3 |
| பொன்னிற நெடுமெய்யும் இன்னழ கொண்முகமும் | | மன்னவர் குலமென எண்ண வுறுவனவே | | புன்னகை யொடுதிரு மண்நுதல் அணிசெய | | மென்னடை நடந்துபோம் விண்ணவனோ எனவே (சேலங்) |
|
4 |
| மனையுறு தகையெலாம் மருவுகன கம்மையை | | மாறுகொண் டிகழ்வார்முன் ஏறுபோல் நடையுறக் | | கனையுறு முழவுடன் கடிமணம் புரிந்தனர் | | கண்ணப்பன் முதல்நான்கே எண்ணப்பிள் ளைகள்பெற. (சேலங்) |
|
5 |
| ஆயிரத்தின் மேலேதொள் ளாயிரத் தைம்பதான | | ஆண்டினில் எட்டாம்மாதம் அணைந்தபத் தொன்பதாம்நாள் | | மாயிருள் தமிழக மனத்திடை பரவவே | | மறைந்த திராமசாமிக் கவுண்டர்எனும் பொன்பானாள். (சேலங்) |
|