|
264. சேலம் குகைத் திருக்குறட் கழகம் |
|
பண் - சிந்துபைரவி தாளம் - முன்னை |
ப. |
| குகைத் திருக்குறட் கழகம் ஒன்றே | | குமுறும் வள்ளுவன் தமிழை நன்றே. |
|
து. ப. |
| தகைத் தமிழகம் முழுதும் இன்றே | | தகுபுலவரைத் தழுவி நின்றே. (குகைத்) |
|
உ. |
| திகைத்தவர் உளந்தெளிக என்றே | | திருவள்ளுவனைத் தெரிந்து முன்றே | | பகைத்தவரையும் பரிவில் வென்றே | | பரமன்அருளும் பெறவே பின்றே (குகைத்) |
|
265. செங்காட்டுப்பட்டி முத்தமிழ்க் கழக வண்மை |
|
'சாமி நீ துணை செய்குவாய்' என்ற மெட்டு |
பண் - சீராகம் தாளம் - முன்னை |
ப. |
| செங்கை முத்தமிழ்க் கழகம் - முது | | செழியன் தமிழ் பழகும் (செங்) |
|
து. ப. |
| செங்கைப் பொதுவர் முதல் சிறந்த அறுபதின்மர் | | சிதலை தினும்ஆல் மதலை புரையும் (செங்) |
|
உ. |
| கங்கை பனிமலை கொண்ட வேந்தரும் கடந்து போயினார் | | எங்கே செல்லினும் ஈகை மன்னரும் இலரே ஆயனார்* | | பொங்கல்தொறும் ஓர்ஏழைப் புலவன் மகிழ்வு பொங்கச் | | செங்கை நிறைய வெண்பொன் வழங்கும் (செங்) |
|
ஆயனார் - ஆய் அன்னார். ஆய் - கடைவள்ளல். |