பக்கம் எண் :

248இசைத்தமிழ்க் கலம்பகம்

2
இந்தி யிங்கே ஆட்சிசெய வந்த பின் நாம் - இனி
என்றுமே அடிமையராய் இருந்திடுவோம்
. (இள)
3
இன்றிருந்து நாளை மாளும் மந்திரிமார் - தான்
என்சொலினும் வாய்மொழியை நம்ப வேண்டாம்
(இள)
4
ஆங்கிலமே ஆட்சிமொழி யாகும்வரை - நீர்
ஆன்றமுறை வேண்டுவீரே ஆண்டவனை.
(இள)
304. குடியரசு குடிகளின் அரசு
'சுயராசியம் அதிகத் தூரமில்லை' என்ற மெட்டு வகை
ப.
குடியர சென்பது குடிகளின் அரசே
குடியுரி மைதருங் கொடை முரசே.
து.ப.
தடியடி யரசும் தற்கொலை விரசும்
சுடுகொலை யரசும் கொடுவரசே.
(குடி)
305. மங்களம்
‘நீநாமரூப முலகு' என்ற மெட்டு
பண் - சௌராட்டிரம்
தாளம் - முன்னை
ப.
எல்லாரும் இன்பமுறவே இறைவ னருளால் மங்களம்
து.ப.
பொல்லாப் பகையும் பசியும் பிணியும்
    இல்லாமல் எங்கும் நன்கனம்.
(எல்லாரும்)