பக்கம் எண் :

56இசைத்தமிழ்க் கலம்பகம்

3
தொல்கதை களும்பல தோற்றரவுக் கதையும்
   தோன்றின வடமொழியே
தெள்ளியே அவற்றையும் தேர்ந்து பார்ப்பின் மூலங்கள்
   தென்னவர் கண்டவென்று தெரியுங் கயல்விழியே
(குமரி)
64. கோயில் வழிபாட்டு மொழி
பண் - (காப்பி)
தாளம் - முன்னை
ப.
கோயில் வழிபாடுகள் தாய்மொழியிற் செய்யினே
   வாய்மையாகும் அதனை ஆயுமின் நீரே
து. ப.
தூயமொழி யென்றேனைத் தேய மொழியிலே
   வாயிலும் அயலவன் ஆயினென் சீரே - கோ.
உ.1
தந்தையோடே பிள்ளை தானுரை யாடவும்
   வந்திடை நிற்பனோ மற்றொரு மொழியன்
முந்திய இறைவனை முன்னியே தொழவும்
   பிந்திய செயன்மொழிப் பட்டனோ வழியன்
(கோயில்)
2
கொஞ்சமுந் திருந்தாத குழந்தையின் மழலையே
   கொண்டாடி மகிழ்ந்திடும் தந்தையும் பாரும்
எந்தொரு கல்வியும் இல்லாதான் மொழியே
   எம்பெரு மானுக்கும் இன்பமாம் தேரும்
(கோயில்)
3
கும்பிடும் அடியவன் நம்பனை வழுத்தலும்
   கோருவ கூறலும் குலவுதாய் மொழியே
முன்பெதுந் தெரியாத வன்புறு மொழியில்
   முன்னாத பொருள்பிறன் முரலுதல் பழியே (கோயில்)