|
2 |
| பேதைமையா லும்மதப் பித்தத்தினா லும்இனப் | | பிரிவினை யாலும்கெட்டுத் தாழ்ந்த பின்னே | | மேதகை தமிழனே மீண்டும்பெற வள்ளுவன் | | மேலாம் வழிவகுத்தான் சூழ்ந்து முன்னே (நாவலந்) |
|
3 |
| தென்முது நூலெல்லாம் வடமொழிப் பெயர்ந்தபின் | | தென்னவர் மடமையால் தீர்ந்தனவே | | இந்நிலை வடமொழி யிருக்கின்ற நூலெல்லாம் | | ஏனையர் நூலெனத் தோன்றுபவே (நாவலந்) |
|
63. குமரிநாட்டுச் சிவன் மால் வழிபாடு |
|
பண் - (தன்னியாசி) தாளம் - முன்னை |
'கனகசபாபதி தரிசனம் ஒருநாள்' என்ற மெட்டுவகை |
ப. |
| குமரிநாடே முதலிற் குறிஞ்சி முல்லை நிலத்தே | | குமரன் மால் வழிபாடாம். |
|
து. ப. |
| தமிழன்மதம் இவையே தகுமொரு சான்றிதுவே | | அமையும் இதை யறியாராயினே கழி கேடாம் (குமரி) |
|
உ.1 |
| சமயம்என்னும் சொல்லையும் சமற்கிருதமே என்பார் | | சாய்ந்துபின் வேறென் சொல்லார் | | சமைஎன்னும் முதலையும் அமைஎன்னும் அடியையும் | | அமைய நோக்கியே பாரும் அம்என்னும் அடிவேரும் (குமரி) |
|
2 |
| வேள்வி வணக்கமதே ஆரிய மதமென்று | | கேள்வி மறையே புகலும் | | ஆள்வினைத் தமிழரும் ஆற்றிய பூசனைகள் | | ஆரிய மொழியேனும் ஆமோ தெய்வம் அயலும் (குமரி) |
|