|
2 |
| மொழிநா கரிக அடிப்படையே - சொல்லின் | | முழுத்தூய்மை இலக்கண நடையே | | இழிவாகப் பேசுபவர் களிடையே - இவர்க் | | கில்லை வேற்றுமை விலங்கிடையே. |
|
3 |
| கருத்தைத் தெரிவிப்பதே மொழியாம் - அது | | கலவையா யிருப்பினும் விழியாம் | | திருத்தமாய்ப் பேசுவதோ பழியாம் - என்று | | தெரிப்பது விலங்கின வழியாம். |
|
4 |
| உண்பது பசியாற்ற வேனும் - அதை | | ஒழுங்கின்றிச் செய்வதுண்டோ காணும் | | பண்புறு தமிழியல் பேணும் - அதைப் | | பாரில் நிகர்க்குமோ எதேனும். |
|
5 |
| கண்ணிலி வழிகாட்டல் போலே - தமிழ் | | கல்லாதார் வரைந்திடும் நூலே | | எண்ணிய பாண்டியர் இக்காலே - இங்கே | | இன்மையால் இவர்குரல் மேலே. |
|
62. இந்திய நாகரிகம் தமிழரதே |
|
பண் - (பியாகு) தாளம் - முன்னை |
ப. |
| நாவலந் தீவுயர் நாகரிகம் | | நாடின் நம் தமிழென நாம் அறிகம். |
|
உ.1 |
| தேவுறு முனிவரும் தென்கலை வாணரும் | | தெளிவுறு நுதற்கண்ணால் தெரிந்ததனால் | | பாவுறு நூல்களும் பற்பல கலைகளும் | | பஃறுளி நாட்டினிற் புரிந்தனரே (நாவலந்) |
|