பக்கம் எண் :

54இசைத்தமிழ்க் கலம்பகம்

2
மொழிநா கரிக அடிப்படையே - சொல்லின்
    முழுத்தூய்மை இலக்கண நடையே
இழிவாகப் பேசுபவர் களிடையே - இவர்க்
   கில்லை வேற்றுமை விலங்கிடையே.
3
கருத்தைத் தெரிவிப்பதே மொழியாம் - அது
   கலவையா யிருப்பினும் விழியாம்
திருத்தமாய்ப் பேசுவதோ பழியாம் - என்று
   தெரிப்பது விலங்கின வழியாம்.
4
உண்பது பசியாற்ற வேனும் - அதை
   ஒழுங்கின்றிச் செய்வதுண்டோ காணும்
பண்புறு தமிழியல் பேணும் - அதைப்
   பாரில் நிகர்க்குமோ எதேனும்.
5
கண்ணிலி வழிகாட்டல் போலே - தமிழ்
   கல்லாதார் வரைந்திடும் நூலே
எண்ணிய பாண்டியர் இக்காலே - இங்கே
   இன்மையால் இவர்குரல் மேலே.
62. இந்திய நாகரிகம் தமிழரதே
பண் - (பியாகு)
தாளம் - முன்னை
ப.
நாவலந் தீவுயர் நாகரிகம்
நாடின் நம் தமிழென நாம் அறிகம்.
உ.1
தேவுறு முனிவரும் தென்கலை வாணரும்
   தெளிவுறு நுதற்கண்ணால் தெரிந்ததனால்
பாவுறு நூல்களும் பற்பல கலைகளும்
   பஃறுளி நாட்டினிற் புரிந்தனரே
(நாவலந்)