|
2 |
| மறந்தும் இயல்நெறி பிறழ்ந்து வரலறக் | | கறந்த நிலையெனத் திறந்த வுளமொடு | | சிறந்த நடையினில் அறந்தழுவு முதற் | | பிறந்த மொழியெனப் புறந்தரவுமே (தனித்த) |
|
3 |
| ஏழை நிலைமையிற் கோழை மனமொடு | | தாழுந் தமிழநீ வாழவுலகினில் | | வேழ மலையவன் சோழ வளவன்நீ | | டூழி தழுவிய பூழியனிசை (தனித்த) |
|
4 |
| மொழிகள் பெருகிய வழிக ளறியக | | விழிபெ றவுமிக இழிவு தரும்பல | | பழிகள் அடியொடும் ஒழிய நறுங்கனிப் | | பிழியும் நிகரறு செழிய நறவத் (தனித்த) |
|
5 |
| கவலை மிகவரும் அவல மறவெதும் | | உவமை யிலனிரு கவினடி தொழுது | | துவர உலகியல் தவிரும் உயரிய | | தவவலி மைதரு சிவம துறவும் (தனித்த) |
|
61. மொழி நாகரிகம் |
|
'தாயினுஞ் சிறந்தது தமிழே' என்ற மெட்டு |
1 |
| நாகரிக முறையில் வினையே - செயும் | | நன்மக்களே யிங்குயர் திணையே | | ஆகுடம்பால் அந்நிலை தனையே - என்றும் | | அடைவதில்லை வேந்தனும் தினையே. |
|