|
10 |
| உதக மண்டலத்தை ஒற்றைக்கல் மந்தையென்று | | முதலில் இருந்ததுபோல் மொழிவதுவும் எந்நாளோ? |
|
11 |
| கல்கத்தா என்று காணும்வங்க வூர்ப்பெயரைக் | | காளிக்கோட் டம்என்று காட்டுவதும் எந்நாளோ? |
|
12 |
| ஆங்கிலத்தில் தான்வழங்கும் அந்தமிழ்நாட் டிடப்பெயர்கள் | | நீங்கிப்பின் தனித்தமிழில் நிகழ்வதுவும் எந்நாளோ? |
|
92. குலப் பிரிவினைக் கேடு |
|
'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ' என்ற மெட்டு |
1 |
| குலமென் னுஞ்சிறைக் கூண்டிற் குள்ளேநீ | | கொடிய தாழும் போட்டாயா - தமிழா | | கொடிய தாழும் போட்டாயா | | நலம தென்னுமே நாயனார் சொலின் | | நாடிக் கேட்கமாட் டாயா - தமிழா | | நாடிக் கேட்கமாட் டாயா (குல) |
|
2 |
| தமிழர் ஒற்றுமை தனையே மாற்றலர் | | தகர்க்க வைத்தபல் கூண்டை - என்றும் | | தகர்க்க வைத்தபல் கூண்டைக் | | குமிழ மூக்கினைக் கொண்ட தமிழனே | | குமைத்து வரமாட்டாயா - இன்னே | | குமைத்து வரமாட்டாயா (குல) |
|
3 |
| பிறப்பி னால்ஒரு சிறப்பு மில்லெனப் | | பெரிய புலவரே சொன்னார் - தமிழ்ப் | | பெரிய புலவரே சொன்னார் |
|