|
91. எந்நாட் கண்ணி |
|
1 |
| ஆட்பெயர் போல்ஊர்ப் பெயரும் அழகான செந்தமிழில் | | ஏற்பட்டுத் தமிழகமே இன்புறுவ தெந்நாளோ? |
|
2 |
| சீரங்கம் தன்னைத் திருவரங்க மென்று முன்போல் | | கூறுங்கள் என்றாள்வார் குறிப்பதுவும் எந்நாளோ? |
|
3 |
| வேதா ரணியமென விளம்புகின்ற பேர்மறைந்தே | | ஈதே மறைக்காடென் றியம்புவதும் எந்நாளோ? |
|
4 |
| மாயூரந் தன்னை மயிலாடு துறையென்று | | வாயாரச் சொல்லி வழங்குவதும் எந்நாளோ? |
|
5 |
| வைத்தீசு வரன்கோயில் வினைதீர்த்தான் கோயிலென்று | | வைத்தபழம் பெயர்மீண்டும் வழங்குவதும் எந்நாளோ? |
|
6 |
| சிதம்பரம் தன்னைச் சிற்றம்பலம் அல்லது | | தில்லையென்று கூறித் திளைப்பதுவும் எந்நாளோ? |
|
7 |
| விருந்தா சலந்தன்னை விரும்புபழ மலையென்று | | கருத்தாகக் கூறிக் களிப்பதுவும் எந்நாளோ? |
|
8 |
| திண்டி வனந்தன்னைத் திகழ்புளியங் கானமென்று | | பண்டே போலெங்கும் பகர்ந்திடுவ தெந்நாளோ? |
|
9 |
| நீல கிரியை நீலமலை யென்றுமுன்னோர் | | போலப் புகன்றுமகிழ் பொங்குவதும் எந்நாளோ? |
|