பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 109

காப்பு

கலிவிருத்தம்

 
   பூவினிற் போகமே புந்தி பொருந்திடும்
   ஆவன மாந்தருக் கன்று வரைந்தன
   பாவினை யின்றியும் பண்டித ருள்ளரால்
   தேவனைப் பாடவுந் திருவருள் வேண்டுமே.
 

கடவுட்பரவல்

 

பிதா

 

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

 
   மன்னுயி1 ரென்றுங் கெட்டு மாண்டுபோ காம லென்றும்
   மன்னுயி2 ரடைய வேக மகனைமுன் னளித்துப் பாரில்
   இன்னதா யன்பு கூர்ந்தா ரெனிற்றிருப் பரம தந்தை
   என்னதென் றுரைப்பேன் ஈசன் எனக்கருள் செய்த வாறே.
 

1. மனிதாத்துமா, 2. நித்தியசீவன்.

 

குமாரன்

 
   பாவியை மீட்க வின்பப் பரத்தைவிட் டிறங்கிப் பாவம்
   பூவிலோ ரேழை யாகிப் பொறையொடு திரிந்து சுற்றி
   நாவினா லுரைக்க வொண்ணா நடுக்குறும் பாடு பட்டே
   ஆவியு மளித்த ஏசு வடியினை முடிமேற் கொள்வாம்.
 

பரிசுத்தாவி

 
   எண்ணரு மாதி நீர்மே லியங்கியே ஏசு தேவ
   புண்ணியன் தலைமே லன்று புறவ1மா யிறங்கிச் சீடர்
   கண்ணிய பெந்தேக் கோத்திற் கனற்பெருங் காற்று வீசி
   மண்ணியல் மொழிகள் பேச மருவுதூ யாவி போற்றி.
 
            1. புறா.