பக்கம் எண் :

110செந்தமிழ்க் காஞ்சி

New Page 1

முத்தேவர்

 
   நித்திய சீவ னைமுன் நிமலனாந் தந்தை தந்தார்
   குற்றவூண் மாந்தி மாந்தன் குற்றுயி ரானான் ஏசு
   நற்றவன் தசையி ரத்தம் நன்மருந் துணவாய் நல்கச்
   சுத்தமா வாவி யாரும் சுகம்பெற வீசி னாரே.
 

திரியேக தேவன்

 
   எங்கணும் நிறைந்த செல்வத் திறைவனி லொருகூ றன்றோ
   கொங்கலர் நறுந்தண் டாராய் குமரனென் றுரைக்குந் தெய்வம்
   அங்கவ ரிருவர் கொண்ட ஆவியே பரிசுத் தாவி
   தங்குமோ ஆவி யின்றித் தம்பிரான் வினையு முண்டோ?
 

அவையடக்கம்

 
   பாட்டுடைத் தலைவ னந்தப் பரமனே யவனோர் காலும்
   கேட்டினை யடையா னாகக் கிளப்பதென் பொருத்த மின்மை
   நாட்டியல் வழுக்க ளைந்தும் நம்பனோர் பொருளாக் (கொள்ளான்
   காட்டுறப் பிழைக டோன்றாக் கல்விநூ லுலகத் துண்டோ?

உலகநேசர்க் குரைப்பது

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

 
   கவலைமிகு முலகியலோர் கனவாகி யுடம்புவிழும்
   கண்ணுவதேன் செல்வ போகம்
   அவநிகழு மாசை1வழிச் சென்றுதிரு வடைந்தாரும்
   ஆசை2யென எல்லை காணார்
   பவநெறிசே ரெரிவிலகிப் பண்ணவனாங் கிறித்தேசு
   பாதார விந்தஞ் சேர்தி
   அவனிமுழு துடையானும் ஆன்மாவை யிழந்துறூஉம்
   ஆதாயம் யாது மாதோ.
 

1. விருப்பம், 2. திசை