|
கொச்சக
ஒருபோகு |
|
|
1. |
பாவிகளை
மீட்டருளப் பாரேழை யாகிச் |
|
சேவடியுஞ்
சிவந்துளையச் சேணடந்து நாளும் |
|
ஓவறஊ ழியஞ்செய்த
உன்னதனாம் ஏசு |
|
தேவகன்சீர்
கேளாத செவியென்ன செவியே |
|
திறமிருந்துங்
கேளாதார் செவியென்ன செவியே. |
|
|
2. |
சிரந்தானுஞ்
சாய்க்கவிடஞ் சிறிதுமின்றி யெங்குங் |
|
கரந்தாள்மெய்
கண்ணுயிர்வாய் கருதியவர்க்கீந்து |
|
பரந்தேதன்
பகைவர்வரப் பருவம்வரு முன்னே |
|
கரந்தானைக்
காணாத கண்ணென்ன கண்ணே |
|
கண்விழித்துக்
காண்பார்தங் கண்ணென்ன கண்ணே. |
|
|
3. |
மடந்தீரப்
பலவுரைத்து மாநிலத்திற் சுற்றிப் |
|
படர்ந்தாடும்
படவரவு பாதாளஞ் சாவு |
|
கடந்தானைப் பன்னிருவர்
கண்டஞ்ச நீர்மேல் |
|
நடந்தானை யேத்தாத
நாவென்ன நாவே |
|
நசரேய நமவென்னா
நாவென்ன நாவே. |