1. கொரி. 13 |
|
வெண்கலத் தாளம்
போல விண்ணில மொழிகள் பேசி |
முன்புகல் தரிசி
யாகி முழுமறை யறிவுற் றாலும் |
மன்பெரு
மலையைப் பேர்க்கும் மால்விசு வாசி யேனும் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |
|
நன்பொருள்
யாவு மீந்து நல்கினு முடம்பு தீக்குத் |
தன்புகழ் கூறா
தென்றும் தயவொடு சாந்த மேவி |
புன்செருக் கழுக்காக
றின்றிப் புரிவினைத் தூய்மை கொள்ளும் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |
|
தன்பதம் சினமே
தீங்கு தழுவிடா தநியா யத்தில் |
இன்புற வின்றி
மெய்யில் எழிலுற மகிழ்ந்தி யாவும் |
நம்பியே பொறுக்கும்
தாங்கும் நலமுடன் விசுவா சிக்கும் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |
|
மன்பல பாடை
தீர்க்க தரிசன மறிவு மாயும் |
புன்றலைக் குழவிக்
கேற்ற புருடனா யொழித்து விட்டேன் |
நம்புதல்
விசுவா சத்தில் நனிபெரி தாக மன்னும் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |