யாக்.
2 |
|
அன்பறு
விசுவா சம்மே யமையுமென் றிருத்தல் வேண்டா |
பண்பறு
பேயும் நன்றே பரமனை விசுவா சிக்கும் |
பின்புநல் வினையில் லாமற் பிழைக்குமோ விசுவா சந்தான் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |
|
குறள் |
|
நண்பெனுஞ்
சிறப்புக் கொண்ட நவையறு மார்வ மாந்தர் |
புன்கணீர்
பூசல் செய்யப் புதவுடை வெள்ள மாகி |
என்புயிர்
பொருள்க ளெல்லாம் ஏனையோர்க் குரிமை செய்யும் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |
|
பொது |
|
பண்பெறு
மழலை மக்கள் பயிலரு மசுத்த ரேனும் |
அன்புடை
யிருபெற் றோரும் அருகணைத் துவகை பூப்பர் |
மன்பெருங்
குறைக ளெல்லாம் மறைத்துறு பாவம் போக்கும் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |
|
நண்பறத்
தூய ரேனும் நளிகடற் காதற் றேவன் |
எண்பதத்
தேழை யாகி இழிகுலத் தவரோ டுண்டு |
புண்படப்
பாடு பட்டுப் பொன்றினர் துளிய தேனும் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |
|
துன்புறு தவத்தின் யோகத் துறவறந் துவரப் பூண்டு |
வன்புறு
யாக்கை பெற்று வாசியில் வாழ்ந்து நீடி |
எண்பெருஞ்
சித்தி பெற்றே எழிலுறு நிலைநின் றாலும் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |
|
பண்புற
மறைப யின்று பலபெரும் பட்டம் பெற்றும் |
இன்புறப்
பிரசங் கித்தும் இலகுரை விளக்கங் கூறி |
நம்புறப்
புதுமை செய்து நரருறும் போய்வி டுத்தும் |
அன்பெனக்
கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. |