| வெண்பா
புகழேந்தி - மிகவும் |
| வியந்திடும்
பரணிக்குச் சயங்கொண்டான் |
| |
|
விருத்தம் உயர்கம்பன் - விரித்த |
|
விழுமிய கவிப்பொருட் கொழுமையென்ன |
| |
| கடுத்தே
கவிபாடும் - அந்தக் |
| காளமேக
வசையுஞ்சி லேடையழகே. |
| |
| அருண
கிரிநாதர் - அடைந்த |
|
அருட்பொலி வாகும்அவர் திருப்புகழே. |
| |
| தொல்காப்பிய
வழிநூல் - இன்று |
| தொன்மைபெற்ற
நூல்களிலே முன்மைபெற்றதே. |
| |
| தெய்வத்
திருக்குறளே - எல்லாத் |
| தேயத்தாரும்
போற்றும் நடுத்திற நீதி. |
| |
| திருவா
சகத்திற்கே - உருகார் |
| ஒருவா
சகத்திற்குமே உருகாரே. |
| |
| ஆல்வேல்
பற்குறுதி - சால |
| அழகிய
நாலிரண்டு மொழிக்குறுதி. |
| |
| கதியே
கதியென்றார் - முன்னைக் |
| கதியே
கம்பருடன் மெய்த்திருவள்ளுவர் |
| |
| சிலப்பதி
காரமென்னும் - காவியம் |
| செப்பிய
ஒவ்வொரு சொல்லும் கொப்பின் தெளிதேன். |
| |
| சிந்தா
மணிச்செய்யுள் - புலவர் |
| சிந்தையுள்ள
குறையெல்லாம் தந்து நிறைக்கும். |
| |
| மணிமே
கலைநூலே - தமிழின் |
| மாகலை
மீதேயணியும் மேகலையாகும். |
| |
| தேனார்
திருக்கோவை - பலர்தம் |
| திறத்தினுக்
கேற்றபடி தெரியக் காண்பார் |
| |
| தேவாரத்
திவ்யப் - பதிகம் |
| செழிய
பக்திச் சுவையை வழியவூட்டும் |
| |
| கற்றோர்
புகழ்ந்தேத்தும் - அகநூற் |
| கலித்தொகை
தீர்க்கும்மணக் கலித்தொகையே. |