பக்கம் எண் :

132செந்தமிழ்க் காஞ்சி

26 ச

26
சிலுவைச் சிந்து

கிறித்துவின் பாடுகளும் மரணமும்

இராப்போசனம், கெத்செமனேத்தியானம்

'என்னடி நான் பெற்ற மங்கை' என்ற மெட்டு

   பண்டிகையின் முதல் நாளை
   மாலை வேளை
   தம தாளை - ஏவிப்
   பட்டினத்தில் ஒரு கேளை - அளி
   பஸ்கா கொண்டாட வுன்
   விஸ்தார வீடெனப்
   பட்சமர் யேசுவுங் கேட்டார் - உடன்
   சித்தமே செய்தனர் வீட்டார்.
   உங்களி லொருவன் இரவே
         என்னைக் கரவே
         காட்டித் தரவே - நேரும்
   உண்மை யென்றார் ஏசு குருவே - பஸ்கா
   உண்ணும் சீடர்துயர்
   நண்ணி நானோவென்று
 
   ஒவ்வொரு பேராகக் கேட்கும் - போது
   உன்னதன் யூதாசைக் காட்டும்
   ஏசுவே யப்பத்தை யெடுத்தார்
         ஆசிப்படுத்தார்
         பிட்டுக்கொடுத்தார் - இதோ
   என்றன் உடலென்று கொடுத்தார் - பின்னர்
   ஏனங் கொண்டென் ரத்தம்
   பானம் பண்ணுமென்றே
   ஏத்தித்தரச் சீடர் மடுத்தார் - உடன்
   எல்லாரும் ஒலிவத் தடுத்தார்
      கெத்செமனே என்ற தானம்
         இருங் கானம்
         பெரு மானும் - தனி