பண்டிகையின்
முதல் நாளை |
மாலை வேளை |
தம தாளை - ஏவிப் |
பட்டினத்தில்
ஒரு கேளை - அளி |
பஸ்கா கொண்டாட வுன் |
விஸ்தார வீடெனப் |
பட்சமர்
யேசுவுங் கேட்டார் - உடன் |
சித்தமே செய்தனர் வீட்டார். |
உங்களி லொருவன் இரவே |
என்னைக் கரவே |
காட்டித் தரவே - நேரும் |
உண்மை
யென்றார் ஏசு குருவே - பஸ்கா |
உண்ணும் சீடர்துயர் |
நண்ணி நானோவென்று |
|
ஒவ்வொரு
பேராகக் கேட்கும் - போது |
உன்னதன் யூதாசைக் காட்டும் |
ஏசுவே யப்பத்தை யெடுத்தார் |
ஆசிப்படுத்தார் |
பிட்டுக்கொடுத்தார் - இதோ |
என்றன்
உடலென்று கொடுத்தார் - பின்னர் |
ஏனங் கொண்டென் ரத்தம் |
பானம் பண்ணுமென்றே |
ஏத்தித்தரச்
சீடர் மடுத்தார் - உடன் |
எல்லாரும் ஒலிவத் தடுத்தார் |
கெத்செமனே
என்ற தானம் |
இருங் கானம் |
பெரு மானும் - தனி |