பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 133

   கீழேவிழுந்து தியானம் - சீடர்
   கிஞ்சித்து மெண்ணாமல்
   துஞ்சித்தங் கண்ணாரக்
   கெட்ட தென்னஅவர் மதியே - மிகத்
   தட்டவும் மன்னவன் விதியே
   சாகரமென்ன விசாரம்
         பவப் பாரம்
         ஏசு சோரும் - அன்று
   சாத்தானின் பேரதி காரம் - அந்தச்
   சங்கடம் நீங்கவே
   தந்தையை வேண்டியே
   சாய்ந்து துயில்சீடர் ஓரம் - வந்து
   தட்டி யெழுப்பினர் நேரம்.

27
யூதாசு காட்டிக்கொடுத்தது,
காய்பாவின் விசாரணை, பேதுரு மறுதலித்தது

'பாதி ராத்திரி வேளையில்' என்ற மெட்டு

 
   காவனந்தனில் ஏசுவின் புறம்
   காதகன் யூதாசு வந்தான் - அவர்
   கன்னத்தில் முத்தந் தந்தான் - பணக்
   காரியத்தைப் புரிந்தான் - யூதர்
   கர்த்தன் ஏசுவைக் கைப்பற்றச் சீடர்
   காற்றா யோடிப் பறந்தார்.
 
   பேதுரு மிகவேக மாயுறை
      பேர்த்த கூரிய ஈட்டி - உறப்
   பிடித்த கையைமுன் நீட்டிச் - சினம்
   பெருகவே மறங்கூட்டி - அங்கே
   பேராசாரியன் வேலைக்காரனைப்
      பேதித்தான் காதைத் தீட்டி
   தம்பிரானது கண்டதும் மனம்
      தாங்கா மல்முகங் கடுத்து - மிகத்
   தட்டினார் கையைத் தடுத்து - சீமோன்
   தரித்தான் வாளுறை மடுத்து - தேவ