| 
      
    மொழிநூலே யறியாதார் முற்றும் - சொல்லும் | 
  
  
    |    முறையற்ற
    சொற்களுக் குரையுண்டோ சற்றும். | 
  
  
    |   | 
  
  
    |    இயற்கையாம்
    தென்மொழித் தன்மை - மிகச் | 
  
  
    |    செயற்கையாய்ச்
    செய்ததே ஆரியத் தன்மை. | 
  
  
    |   | 
  
  
    | 
       இந்திய
    மொழியெல்லாம் ஒன்றே - என்றால் | 
  
  
    | 
       இந்தியர்க்
    கூண்மண சம்பந்த முண்டே | 
  
  
    |   | 
  
  
    | 
       அண்மை இந்திஎளி
    தென்றீர் - அந்த | 
  
  
    | 
       ஆங்கில ஒலிகளோ
    எளியன கண்டீர். | 
  
  
    |   | 
  
  
    | 
       ஆங்கிலம் போலவே
    இந்தி - ஒரு | 
  
  
    | 
       ஆரியக்
    கிளைமொழி யானது சிந்தி. | 
  
  
    |   | 
  
  
    | 
       உடன்பிறந் தார்க்கெல்லாம்
    அன்போ - நம | 
  
  
    | 
       துடன்பிறந் தேகொல்லும்
    நோயொடு நண்போ? | 
  
  
    |   | 
  
  
    | 
       தமிழ்நாடோ
    ஒருசிறு பாகம் - என்று | 
  
  
    | 
       தள்ளாதீர் பாரதத்
    தலையது வாகும். | 
  
  
    |   | 
  
  
    | 
       பலர்இந்தி
    பேசுவ தாலே - தமிழ்ச் | 
  
  
    | 
       சிலர்அதைத்
    கற்றறிடுஞ் சிரமமுங் காலோ. | 
  
  
    |   | 
  
  
    | 
       ஓநாயாட் டுக்குட்டி
    நியாயம் - அறி | 
  
  
    | 
       வுள்ளவ ரெல்லாரும்
    தள்ளுவர் மாதோ. | 
  
  
    |   | 
  
  
    | 
       ஆரியங் கலப்பதி
    னாலே - முற்றும் | 
  
  
    | 
       அழிந்துபோம்
    தமிழ்இதை அறிவீர்இக் காலே. | 
  
  
    |   | 
  
  
    | 
       தமிழென்றே
    ஒருமொழி யுண்டோ - என்று | 
  
  
    | 
       சந்தேகிக்
    குங்காலம் சமீபமா யுண்டே. | 
  
  
    |   | 
  
  
    | 
       தமிழாஉன்
    மடிகட்டிக் கொண்டு - இன்று | 
  
  
    | 
       தற்காத்துக்
    கொள்உன்றன் தாய்மொழி நன்று. |