பாதார விந்தமே பாவியின் சொந்தமே |
நாதா
பணிந்தமே நம்பி யிருந்தமே |
நானிலத்தும்
மேனிலத்தும் நாதனே நல்வேதனே |
ஈனரைப்போல் ஏனுனக்கே எல்லை யில்லா வேதனை |
என்னோ கொடுமையீ தெங்கணு முள்ளதோ |
முன்னோர் கனவிலும் முன்னின தில்லையே |
|
பாதகப்
பகைவர்பல பந்தமாய்நிர்ப் பந்தமாய்க் |
கோதில்லா
மெய்க்கோ வுனையுங் கொல்லமனம் வந்ததோ |
குற்றமில்லாமலே கொல்லவும் நீதமோ |
கொற்றவ னாணையும் கொல்லுவார் போதமோ |
|
ஆணிகை
காலேறி ரத்தம் அருவியாய்ப் பாய்ந்தோடுதே |
மேனியெல்லாம்
மாறித் தாகம் மிஞ்சிமுகம் வாடுதே |
ஐயோஇத் தொல்லையை ஆரிடஞ் சொல்லுவேன் |
மெய்யேஇப்
புல்லரை மேதினி கொள்ளுமோ? |
|
வாரடிகள்
வீங்கியந்தோ வரைவரையாய்த் தெரியுதே |
வாதையெங்ஙன்
ஆற்றுவாயென் வயிறுபற்றி யெரியுதே |
வல்லோரைத் தெய்வமும் வருத்த வில்லையே |
பொல்லா விரோதிகள் புத்திர முள்ளதே |
|
தேகமெல்லாம்
நோவு மீறித் தியங்கிநீ கலங்கவும் |
ஆகடிய
மாய்ப்பலரும் அவதூறு முழங்கவும் |
தேவாஇவ்
வேளையோர் திக்குமில் லாமலே |
ஆவாநீ போகமுன் அக்கர மானதோ |
|
பாவிகளுக்
காகவேயிப் பாரில்பாடு பட்டவா |
காவகச்
சிலுவைமீது கதறியாவி விட்டவா |
கல்லே யெனாதகம் கையறும் வேளையும் |
வல்லே யறாதினும் வைகுமென் ஆவியும் |
|
ஏசையா
உன்இன் முகத்தை என்றுநான்கண் டாறுவேன் |
இன்னல்வாரி
யின்நடுவில் எங்ஙன்கரை யேறுவேன்? |