| |
பாவிகட்காய்ப்
பாரில் வந்தே பாடுபட்டுத் தேகநைந்து |
| |
தேவமகன்
சிலுவையுரை திவ்யமணி ஏழுமன்பு |
| |
சேவைபலித்
தேசுபெறச் சிந்தி நெஞ்சே |
| |
|
| 1. |
எந்தையேநீர்
இவர்களுக்கு மன்னித்திடும் தங்கள் செயல் |
| |
இன்னதென்றே
அறியாதிருக் கின்றனரென் றேசிரந்தார் |
| |
முன்புரைத்த
அன்புபொறை பண்புறவே |
| |
|
| 2. |
என்னையுந்தன்
அரசிலெண்ணும் என்றவலக் கள்வனுக்கே |
| |
இன்றைக்கு
நீ என்னுடனே பரதீசிருப் பாயென்றனர் |
| |
எம்பெருமான்
வீடளிக்கும் எத்தரர்க்கும் |
| |
|
| 3. |
மாதேயதோ
உன்றன்மகன் யோவானதோ உன்றா யென்றார் |
| |
மாதாகடன்
அன்புமிகும் மாணவனின் மைந்த நிலை |
| |
போதரத்தம்
தேவிகமும் புண்ணியனார் |
| |
|
| 4. |
என்தேவனே
என்தேவனே ஏனென்னைக் கைவிட்டீ ரென்றே |
| |
ஏனைமொழி
ஏலிஏலி லாமாசபக் தானி யென்றார் |
| |
மானிடனாய்ப்
பாடுபட்டே மாண்டதிறம் |
| |
|
| 5. |
தேகமதால்
நீரின்மேலும் தேவிகத்தாற் பாவிமேலும் |
| |
தாகமாக
இருக்கிறேன் நான்என்று சொன்னார் தம்பிரானும் |
| |
பானமின்றிப்
பாய்ந்திரத்தம் போன நிலை |
| |
|
| 6. |
பாவம்பட
நாகஞ்சாவு பாதளம் பேய்மீது வெற்றி |
| |
சேவகமோ
வேதனையோ சீவமீட்போ முடிந்ததென்றார் |
| |
பாவபலி
யானபெருந் தேவமறி |
| |
|
| 7. |
எந்தையேஉம்
கைகளிலென் ஆவியை ஒப்புவிக்கின்றேன் |
| |
என்றுரக்கக்
கூவியுடன் எம்பெருமான் மாய்ந்தனரே |
| |
தந்தையொடு
தாமொருவ ரென்றதகை. |