பக்கம் எண் :

144செந்தமிழ்க் காஞ்சி

      வருணம் பெற உடம்பு
      விரணம் படுந்தழும்பு தடிக்கும்
              ஒவ்வோர் நொடிக்கும்
 
   பச்சைப் புண்ணிலே வடிவேலே - உறப்
   பதித்த பெருங்கொடுமை போலே - குட்டுப்
      பட்டதலை குத்துமொரு
      கட்டுமுள்ளை யிட்டதெனச் சிரமோ
              அது மரமோ
 
   சுந்தர முகமெல்லாம் எச்சம் - பவ
   சோதனைக் காரன்வந்து மெச்சும் - இரு
      சோரரொடு பாத சாரி
      வீரர்பலர் கூறும்பரி காசம்
              அலை கேசம்
 
   தாங்க முடியாப் பசி தாகம் - பச்சைத்
   தண்ணீரு மில்லையவர் பாகம் - திருத்
     தங்கமேனி வற்றலெனப்
     பங்கமாக நிற்றலெனப் பாவம்
              பரிதாபம்
 
   பஞ்ச பாதக பரிகாரம் - அவர்
   படிவத்தி லைந்து காயம் பாரும் - திருப்
     பாதத்தே விழுந்தழுது
     பாவத்தை முனங்கழுவ வாரும்
              கண்ணீர் வாரும்

37
'மஞ்சுநிகர் குந்தள மின்னே' என்ற மெட்டு

   நெஞ்சமே, நினைந்துபார் முன்னே - நிருதவீரர்

குருசிலார

   நிந்தையா யறைந்த மாமன்னே - அந்த
      நீதனும்பெரு வேதனையுற
      மோது மென்பவ மேதுசெய்குவேன்
   நின்று முழங்காலில் நீடியே - அழுதலறித் தொழுதிடுவென்
      நேசமா மகாரை நாடியே
   முப்பதின்மேல் மூன்றும் அரையும் - பருவம்வரச் சிலுவையதில்