| 3. |
நிறத்திற்
சிறந்தவரே மேலோர் - என்று |
| |
நிறுவினால்
குஷ்டர்உயர் பாலோர் - இந்த |
| |
நீணிலத்தில்
தட்பவெப்ப |
| |
நிலையினா
லாகுமைந்து நிறமே - பல திறமே |
| |
|
| 4. |
மாரிலே
நூலணிவதன் பெருமை - இந்து |
| |
மாநிலத்தில்
பல்குலத்திற் குரிமை - புது |
| |
மனை கட்டும்போது
செங்கல் |
| |
எடைகட்டும்
சுற்றுவது நூலே - தவிர்மாலே. |
| |
|
|
5. |
பார்ப்பனி வயிற்றில்ஒரு
மகனும் - ஒரு |
| |
பறைச்சி வயிற்றில்ஒரு
மகனும் - வரப் |
| |
பழவினை காரணமோ |
| |
மணவினையால்
கருவுறாதோ - பிறக்காதோ. |
| |
|
|
6. |
சந்திர சூரியரென்றே
சுடரும் - எல்லாச் |
| |
சாதிகட்கும் ஒன்றாய்
வானம் படரும் - மிகச் |
| |
சாடுகின்ற காற்றுமழை |
| |
சாதிக்கொரு வேற்றுமையோ
சாற்றும் - எந்தவாற்றும் |
| |
|
|
7. |
எழுவகை யானஉடல் தாது
- ஒன்றாய் |
| |
இருக்குமெல்
லாருக்குமென் றோது - மிக |
| |
இழிந்துயர் குலங்களாய் |
| |
இருபாலுங் கூடி வாழ
இசையும் - இல்லை வசையும். |