|
2 |
| |
|
இரும்பும்இன்று நெய்வேலியில் ஏற்படும் பழுப்புநிலக் கரியும் |
|
பரும்பெனக்கு விந்துதொழிற் சாலைகள் பலவும்எழுந் தாலும் |
|
விரும்பிவிடை யேறிமுனம் வீற்றிருந் தாய்ந்ததமிழ் நைய |
|
உரும்புபகை இந்தியொடு நாகரி ஊறுசெயின் நன்றோ? |
| |
|
3 |
| |
| கீழ்கரைநின்
றேகிமலை கீண்டுபல விருப்புப் பாதை |
| மேல்கரைநேர்
சேரவிணை யாகிப்பின் மின்னோட்டம்வந் தாலும் |
| சேல்விழியாள்
கணவன்களன் சேர்ந்தாய்ந்த செந்தமிழே நைய |
| மால்வழியும்
இந்தியொடு நாகரி மருவின்ஒரு நன்றோ? |
| |
|
4 |
| |
|
பள்ளியொடு கல்லூரிகள் பாங்காகப் பட்டிதொட்டி யெல்லாம் |
| நள்ளியெதுங்
கட்டணமே யின்றிநல் கூர்ந்தாருங் கற்றாலும் |
|
வெள்ளைவிடை யேறிமுனம் வேண்மிக ஆய்ந்ததமிழ் நைய |
|
கள்ளமுறும் இந்தியொடு நாகரி கறுவிவரின் நன்றோ? |
| |
|
5 |
| |
| முதியோரெலாம்
இளமைவர மூப்புச்சம் பளமும் பெற்று வாழ்ந்து |
| பதியாமலே
இளைஞரெலாம் பாங்கான பதவிகள்பெற் றாலும் |
| மதிசூடிமுன்
மதுரையமர் மன்றஞ்சேர்ந் தாய்ந்ததமிழ் நைய |
| புதிதாய்வரும்
இந்தியொடு நாகரி புகுமேல்ஒரு நன்றோழூ |
| |
|
6 |
| |
| நண்ணும்நடுப்
பகல்மாணவர் நாட்டுள்ள பள்ளிகளி லெல்லாம் |
| உண்ணும்படி
அறுசுவைசேர் உண்டிகள் உதவியேவந் தாலும் |
| பெண்ணியிடங்
கொண்டான்முனம் பேணியே ஆய்ந்ததமிழ் நைய |
| எண்ணிவரும்
இந்தியொடு நாகரி இன்னல்செயின் நன்றோ? |
| |
|
7 |
| |
| புத்தாடைபல்
பொத்தகங்கள் பூந்துகிற் பொக்கணத்தி லிட்டுத் |
| தத்தளிக்கும்
மாணவரெல் லாருக்கும் தந்தையிற்றந் தாலும் |
| பித்தனென்னும்
பெம்மான்முனம் பீடுற ஆய்ந்ததமிழ் நைய |
| எத்திவரும்
இந்தியொடு நாகரி எய்தின்ஒரு நன்றோ? |