இது தாய் சொல்வது, நாதநாமக்
கிரியையில் நீட்டிப் பாடவேண்டும்.
| |
ரா ரா
ரோ ரா ரா ரோ..... |
| |
ரா ரா
ரோ ரா ரா ரோ..... |
| |
|
| 1. |
கண்ணே!
உறங்கு உறங்கு - என் |
| |
கண்மணி
உறங்கு உறங்கு |
| |
பொன்னே!
உறங்கு உறங்கு - என் |
| |
பொன்மணி
உறங்கு உறங்கு |
| |
|
| 2. |
காலுங்
கடுத்தே - நான் |
| |
கடுகி
வழிநடந்தேன் |
| |
பாலும் கையிலேந்தி
- நான் |
| |
பார்த்தகண்ணும்
பூத்துப்போச்சு |
| |
|
| 3. |
பச்சைக்
கிளியே! நீ |
| |
பனிக்கெல்லாம்
எங்கிருந்தாய்? |
| |
இச்சித்த
தினைக்கதிரை |
| |
ஏக்கமறத்
தின்றாயோ? |
| |
|
| 4. |
மாடப்
புறாவேநீ! |
| |
மழைக்கெல்லாம்
எங்கிருந்தாய்! |
| |
காடான
காடெல்லாம் - நீ |
| |
கண்டுவரப்
போனாயோ? |
| |
|
| 5. |
கூவுங்
குயிலே! நீ - முன் |
| |
குளிருக்கே எங்கிருந்தாய்? |
| |
மூவா
மருந்தே - நான் |
| |
முத்தமிடக்
காணேனே. |
| |
|
| 6. |
கப்பல்
தனித்தேறி - முன் |
| |
கைப்பொருளைத்
தேடப்போன |
| |
அப்பன்
வரக்காணேன் - என் |
| |
ஆசைக்கிளி
நீஉறங்கு. |