|
19ஆம
19ஆம் பாடம்
கொக்கும் நரியும்

'முத்திநெறி அறியாத'
என்ற மெட்டு
| 1. |
ஒருஊரில்
ஒருகொக்கும் |
| |
ஒருநரியும் இருந்தனவே |
| |
ஒருநாளில்
நரிகொக்கை |
| |
ஒருவிருந்துக்(கு) அழைத்தது பார் |
| |
|
| 2. |
குறித்த நாளும்
வந்தவுடன் |
| |
கொக்குநரி வீட்டுக்குப் போய்ப் |
| |
பொறுத்திருந்து
பசிமிகவே |
| |
போசனத்தில்
ஆசைவைக்க |
| |
|
| 3. |
தட்டையான
கலத்தில் கஞ்சித் |
| |
தண்ணீரை
விட்டு நன்றாய்க் |
| |
குட்டைநரி
குடித்ததுவே |
| |
கொக்குக்கோ முடியவில்லை |
| |
|
| 4. |
கொக்கதன்பின்
பதில்விருந்தில் |
| |
கூசாவில்
கறிவைத்துத் |
| |
தக்கபடி தின்றுதின்று |
| |
தான்ஏப்பம்
இட்டதுவே |
| |
|
| 5. |
கூசாவில்
நரிதலையைக் |
| |
கொண்டுபோக
முடியாமல் |
| |
பேசாமல்
இருந்திருந்து |
| |
பிறகுதான்போய்
விட்டதுவே |
| |
|
| 6. |
எப்படிநாம்
பிறருக்கு |
| |
ஏதொன்றைச்
செய்கிறோமோ |
| |
அப்படியே
பிறர்நமக்கும் |
| |
ஐயமறச்
செய்திடுவார். |
|
|
|