பக்கம் எண் :

நடுவணரசின் கடமை187

 

சாஸ்திரி = நூலறிஞன்
சர்மா = திருவன், இன்பன், பேறன்.
செட்டி = எட்டிப்பட்டம் பெற்ற வணிகக் குலத்தார்.
எட்டி - செட்டி = வணிகர்.
நாயுடு = நாயன் (தலைவன்), தண்டநாயன் படைத் தலைவன். நாயன் - நாயடு - நாயுடு.
ரெட்டி = இரட்டபாடி நாட்டான் (பலிஜவாரு புராணம்)
முதலியார் = படைமுதலியார் (சேனைத்தலைவர்) என்பதன் குறுக்கம்
பிள்ளை = வேந்தனொடு பிள்ளைபோல் இணைக்கப் பட்ட வேளாளக் குறுநில மன்னன் பட்டம்.

  இந்தியருக்குள் உணர்ச்சிவய ஒருமைப்பாடு (Emotional Integration) உண்டாக்கும் குழுவினரும் இத்தகைய பட்டங்களைத் தாங்கி நிற்பது, எள்ளி நகையாடத் தக்க செய்தியாகும்.

  குலப்பட்டத்தை நீக்கித் தொழிலடிப்படையில் குடிமதிப்பு
(Census) எடுப்பதே, ஒருமைப்பாட்டிற்கு உகந்த வழியாம்.