"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்." (புறம். 18)
"சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை." (குறள். 1031)
"உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாது
எழுவாரை யெல்லாம் பொறுத்து." (குறள். 1032)
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." (குறள். 1033)
"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப் போர்." (சிலப். 10 : 149-50)
"காப்பாரே வேளாளர் காண்." (தனிப்பாடல்)
"வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்." (திரிகடுகம் 12)
"உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு." (நல்வழி. 12)