எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் |
மனம்+கலங்கு= மனங்கலங்குணூடும்+சொல்= கடுஞ்சொல் மாதம்+தோறும்= மாதந்தோறும் | க, ச, த | ‘ம்’ இறுதி ‘ங்’, ‘ஞ்’, ‘ந்’ என்று மாறலாம் | ‘மனம் கலங்கு’, ‘கடும் சொல்’, ‘மாதம்தோறும்’ என மாற்றம் எதுவும் இல்லாமலும் எழுதப்படுகின்றன. |
நிலம்+கள்=நிலங்கள் | -கள் | ‘ம்’, ‘ங்’ என மாறும் | ‘-கள்’ பன்மை விகுதி. |
மரம்+கிளை= மரக் கிளைசங்கம்+செய்யுள்= சங்கச்செய்யுள் சட்டம்+திருத்தம்= சட்டத் திருத்தம் நாகரிகம்+செயல்= நாகரிகச் செயல் மாநகரம்+பேருந்து= மாநகரப்பேருந்து காலம்+சக்கரம்= காலச் சக்கரம் | க,ச,த,ப | ‘ம்’ மறைந்து ஒற்று மிகும் | வேற்றுமை உறவில் அல்லது அடை ஏற்ற நிலையில் அல்லது உவமிக்கும் வகையில் இரு பெயர்ச்சொற்கள் இணையும்போது ஒற்று மிகும். (‘சங்ககாலம்’ என்பதில் ஒற்று மிகுவதில்லை.) |
குலம்+முறை=குல முறை திருமணம்+வாழ்த்து= திருமண வாழ்த்து மோப்பம்+நாய்= மோப்ப நாய் | ம,வ,ந | ‘ம்’ மறையும் | |
மாநிலம்+முழுவதும்=மாநிலம் முழுவதும் | ம | ‘ம்’ மறைவதில்லை | வேற்றுமைத் தொகையாக இல்லாதபோது ‘ம்’ மறைவதில்லை. |
பெரும்+பங்கு= பெரும் பங்குமூன்றாம்+பிறை= மூன்றாம்பிறை | ப | ‘ம்’ மறைவ தில்லை | |
அகம்+இருள்= அகவிருள்புறம்+இதழ்= புறவிதழ் | உயிரெழுத்து | ‘ம்’ மறைந்து ‘வ்’ இடையில் வரும் | ‘ம்’ மறைந்து உடம்படுமெய் ‘வ்’ வருதல் கலைச்சொற்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. |
சரித்திரம்+ஆசிரியர்= சரித்திரஆசிரியர்வெங்காயம்+ உற்பத்தி= வெங்காயஉற்பத்தி | உயிரெழுத்து | ‘ம்’ மறையும் | ‘ம்’ மறைந்தாலும் இந்தத் தொடர்கள் உடம்படுமெய்யோடு சேர்த்து எழுதப்படுவதில்லை. |