மாநிலம்+அளவில்= மாநில அளவில்குற்றம்+அனைத்தும்= குற்றம் அனைத்தும் | உயிரெழுத்து | | வேற்றுமைத் தொகையாக இல்லாத சொற்களில் ‘ம்’ சிலவற்றில் மறைந்தும் சிலவற்றில் மறையாமலும் வரும். | ஆயிரம்+ஆயிரம்= ஆயிரமாயிரம் | உயிரெழுத்து | உயிர்மெய்யாக எழுதப்படுகிறது | ‘ஆயிரம் ஆயிரம்’, ‘ஆயிரம் ஆண்டுகள்’ என்று எழுதப்படுவதும் உண்டு. | 23. முதல் சொல்லின் இறுதி எழுத்து ய் எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | பேய்+காற்று= பேய்க் காற்றுவாய்+சொல்= வாய்ச் சொல் பொய்+தூக்கம்= பொய்த் தூக்கம் தாய்+பாசம்= தாய்ப் பாசம் | க,ச,த,ப | மிகும் | வேற்றுமை உறவில் அல்லது அடை ஏற்ற நிலையில் இரு பெயர்ச்சொற்கள் இணையும்போது ஒற்று மிகும். | போய்+சேர்= போய்ச் சேர் நன்றாய்+தெரிகிறது= நன்றாய்த் தெரிகிறது ஊர்ஊராய்+திரிந்து= ஊர்ஊராய்த் திரிந்து | க,ச,த,ப | மிகும் | ‘ய்’ என்பதில் முடியும் வினையெச்சத்தின் பின்பும் ‘-ஆய்’ வினையடை விகுதி சேர்ந்த சொல்லின் பின்பும் ஒற்று மிகும். | காய்+கனி=காய்கனி தாய்+சேய்= தாய்சேய் தாய்+தந்தை= தாய்தந்தை பாய்+படுக்கை= பாய்படுக்கை | க,ச,த,ப | மிகாது | ‘காயும் கனியும்’ ‘தாயும் சேயும்’ என்பதில் ‘உம்’ இல்லாமல் (உம்மைத்தொகையாக) வரும்போது ஒற்று மிகாது. | நாய்+கள்=நாய்கள் பொய்+கள்=பொய்கள் | -கள் | ‘க்’ மிகாது | ‘-கள்’ பன்மை விகுதி. | மெய்+அன்பு=மெய்யன்பு பொய்+ஆகு=பொய்யாகு | உயிரெழுத்து | ‘ய்’ இரட்டிக்கிறது | முதல் சொல் ஓரசையாகவும் அதில் வரும் உயிர் குறிலாகவும் இருந்தால் இரட்டிக்கும். | |