பக்கம் எண் :

தொகைகள்71கி. செம்பியன்

  1. கபிலபரணர், சேரசோழபாண்டியர், புலிவிற்கெண்டை என்றல் தொடக்கத்து
    உம்மைத் தொகைகளிலே அனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்தன.

  2. பூங்குழல், உயிர்மெய் என்றல் தொடக்கத்து அன்மொழித் தொகைகளிலே,
    சொல்லுவோனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருள் மேலது ஆகாது,
    இவ்விரு மொழியும் அல்லாத உடையாள் முதலிய புறமொழிப் பொருள் மேலது
    ஆதலால், அப்புற மொழிகளில் பொருள் சிறந்தன.
- நன்னூல் காண்டிகை உரை
  • "வல்லொற்று வரினே இடத்தொகை யாகும்
    மெல்லொற்று வரினே பெயர்த்தொகை யாகும்"
    - நன்னூல்-371
1. வடுகக்கண்ணன் > இது வடுகநாட்டில் பிறந்த கண்ணன்
என விரியும்.
வடுகங்கண்ணன் > இது வடுகனாகிய கண்ணன் என்றாயினும்,
வடுகனுக்கு மகனாகிய கண்ணன் என்றாயினும் விரியும்
2. துளுவச்சாத்தன் > இது துளுவநாட்டிற் பிறந்த சாத்தன் என விரியும்.
துளுவஞ்சாத்தான் > இது துளுவனாகிய சாத்தன் என்றாயினும்,
துளுவனுக்கு மகனாகிய சாத்தன் என்றாயினும் விரியும்
- நன்னூல் காண்டிகை உரை
  • உம்மைத் தொகை உயர்திணையாக அமைந்தால் பலர்பால் ஈறாக
    முடிக்கவேண்டும் (கபிலபரணர், சேரசோழ பாண்டியர்); உம்மைத்தொகை
    அஃறிணையாக இருந்தால், பலவின்பாலாக முடிக்க வேண்டிய நியதி இல்லை.
    உண்மை இன்மைகள் (அல்லது) உண்மை இன்மை
    இராப்பகல்கள் (அல்லது)இராப்பகல்