பக்கம் எண் :

2செந்தமிழ்ச் சிறப்பு

New Page 1

பெண்டு

பெண்டார்  

பெண்டிர்(உயர்வு)
பெண்டுகள்(உயர்வின்மை)

பெருமான் 

பெருமானார்

பெருமானர், பெருமான்மார்

பெருமாட்டி

பெருமாட்டியார்

பெருமாட்டியர்,
பெருமாட்டிமார்

துறவி   

துறவியார் 

துறவியர்

அடிகள்

அடிகள்,  அடிகளார்

அடிகண்மார்

    இளந்தையர் என்பது இருபாற் பொதுப்பன்மைப் பெயர் (Young men or women or both) இளந்தை = இளமை

    மகரமெய்யீற்று இயற்பெயரை (proper name) உயர்வுப் பன்மையிற் குறித்தல்  வேண்டின், னகர மெய்யீற்றுப் பெயராக மாற்றிக்கொள்ளலாம்.

எ-டு:

பெயர் உயர்வுப் பன்மை பன்மை

செல்வம் - செல்வன்

செல்வனார்

செல்வர், செல்வன்மார்

    மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளினின்று பொதுவாக 'அர்' ஈறு பன்மையையும் 'ஆர்' ஈறு உயர்வுப் பன்மையையும் உணர்த்தும் என அறிந்து கொள்க.

    குமரன் என்னும் தென்சொல் 'கும்' என்னும் அடிப்பிறந்து, கூட்டத்திற்குத் தகுந்தவன் அல்லது திரண்டவன் என்னும் பொருளில் இளைஞனையே குறித்தது. இதன் பெண்பால் வடிவான குமரி என்னும் சொல்லும் இதே பொருளில் இளைஞையைக் குறித்தது.

    கும் - கும்முதல் = கூடுதல், திரளுதல். கும் - கும்மல் = குவியல்.

    கும் - குமி - குவி - குவை, குவால், குவிவு, குவவு.

    குமி - குமியல் - குவியல், கும்மிருட்டு = திணிந்த காரிருள்.

    குவவுத்தோள் = திரண்டதோள்.

    கும் - கும்பு - கும்பல் = கூட்டம், கும்புதல் = கூடுதல்.

    கும்பு = கூட்டம்.

    கும் - குமர் = திரண்ட இளமை, இளமை கன்னிமை அழியாத்தன்மை,

    குமர் -குமரன், குமரி.

குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனும் பாலைநிலத் தெய்வமான காளியும், என்றும் இளமையர் என்னுங் கருத்துப்பற்றியே முறையே குமரன், குமரி எனப்பட்டனர். காளியின் பெயராலேயே, மூழ்கிப் போன பழம் பாண்டிநாட்டுத் தென்கோடி மலையும் வடகோடி யாறும் குமரியெனப் பெயர் பெற்றிருந்தன. குமரிமலையின் பெயராலேயே, மூழ்கிப் போன தென