பக்கம் எண் :

தமிழர் மதம் 143

New Page 1
    (4) சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும்,
செந்தமிழ்ப் பாண்டிநாட்டுத் தலைநகராகிய மதுரையில்
நிகழ்ந்தமை.
   
    (5) சிவபெருமானின் எண் மறச்செயலகமும் (அட்ட வீரட்டம்) தமிழ்நாட்டிற்குள்ளிருத்தல்.
   
  "பூமன் சிரங்கண்டி யந்தகன் கோவல் புரமதிகை
  மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
  காமன் குறுக்கை யமன்கட வூரிந்தக் காசினியில்
  தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே."
   
    (6) சிவன் நடஞ்செய்யும் அம்பலம் ஐந்தும் தமிழ்நாட்டிலிருத்தல்.
   
    (7) முருகனும் சிவனும் வேதத் தெய்வமன்மை.
   
    (8) உருத்திரன், இந்திரன், அக்கினி ஆகிய மூவர்க்கும் வேதத்தில்
வந்துள்ள 'சிவ' என்னும் அடைமொழி, நல்ல அல்லது
மங்கல என்றே பொருள்படுதல்.
   
    (9) வேத ஆரியர், வடநாட்டுச் சிவனியரை, சிவக்குறி வணக்கம்
பற்றி ஆண்குறி வணக்கத்தார்(சிச்ன தேவா) என்று பழித்தமை.
   
    (10) ஆயிரத்தெண் சிவத்திருப்பதிகளுள், ஒருசிலவே வடநாட்டிலிருத்தல்.
   
    (11) கல்லாலமர நிழலில் நால்வர்க்குத் திருமறை கற்பித்த திருவாசி
ரியனைத் தென்முக நம்பி (தக்ஷிணாமூர்த்தி) எனல்.
   
    (12) சிவன் என்னும் சொல் செவ்வண்ணன் என்று பொருள்படுதலும்,
சிவனுக்கு அழல் வண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக்
கூத்தன் என்னும் பெயர்களுண்மையும்.

திருமால் மதம் தமிழர் மதம் என்பதற்குச் சான்றுகள்

    (1) "மாயோன் மேய காடுறை யுலகமும்" என்று, மால் வணக்கம்
தமிழகத்து முல்லைநிலத்திற்குரியதாகத் தொல்காப்பியத்திற்  சொல்லப்பட்டிருத்தல். (அகத்.5)
   
    (2) துழாய் மாலையும் கலுழ(கருட)வூர்தியும் முல்லைத்திணைக்
குரியனவாதல்.
   
    (3) மாயோன், மால் என்னும் பெயர்கள் கரியன் என்று பொருள்
படுதலும், கரியவன், கார்வண்ணன்,  கடல்வண்ணன், மணி
வண்ணன் என்னும் பெயர்கள் திருமாலுக் குண்மையும்.