பக்கம் எண் :

144தமிழர் மதம்

New Page 1
    (4) முல்லை வாணரான இடைய ரெல்லாரும் திருமால் வழிபாட்
டினராயிருத்தல்.
   
    (5) திருமால் வேதத் தெய்வமன்மை.
   
    (6) விண்டு (விஷ்ணு) என்னும் வேதத்தெய்வம்
கதிரவத்தெய்வமா யிருந்தமை.
   
    (7) திருவரங்கமும், மொழிவாரி மாநிலப் பிரிவால் தெலுங்கரைச்
சேர்ந்து போன திருப்பதியும், திருமால் மதத்தினர்க்குத் தலை
சிறந்த திருநகர்களாயிருத்தல்.

5. தமிழ ஆரிய மத வேறுபாடு

வேதக்காலம்

      தமிழம் ஆரியம்
   
    சிறுதெய்வ வணக்கமும் பெருந் பல் சிறுதெய்வ வணக்கம்.
    தேவ மதமும் கடவுட் சமயமும்.  
   
    இல்லத்திலும் கோவிலிலும் வீட்டிலும், வெளியிலும் வேள்வி
    உருவ வழிபாடும் எங்கும் வளர்த்தல்.
    உருவிலா வழிபாடும்.  
   
    தமிழக் குருக்கள். பிராமணக் குருக்கள்.
   
    தமிழ் வாயில். வேத மந்திர வாயில்.
   
    மறுமையில் நல்வாழ்வும் மறுமையில் விண்ணுலகப் பேறு.
    விண்ணுலகப் பேறும் வீடுபேறும்.  
   
    வாய்மையால் தூய்மை. நீரால் தூய்மை.
   
    மக்கள் நல்லொழுக்கத்தாலும்செங் வேள்வியால் மழையெனல்.
    கோலாட்சியாலும் மழையெனல்.  

முத்திருமேனி அல்லது இந்துமதக் காலம்
 

      தமிழம் ஆரியம்
   
    சிவ வழிபாடு அல்லது திருமால் முத்திருமேனி வழிபாடு.
    வழிபாடு அல்லது கடவுள் வழிபாடு.  
   
    சிவன் முத்தொழில் தலைவன்
    அல்லது திருமால் முத்தொழில்
    தலைவன் எனல்.
நான்முகன், திருமால், சிவன்
(உருத்திரன்) ஆகிய மூவரும்
முறையே படைப்பும் காப்பும்
அழிப்பும் செய்பவர் எனல்.