பக்கம் எண் :

152தமிழர் மதம்

    பிரேரக காண்டம் - இயக்கக் காண்டம். போஜயித்திரு காண்டம் - நுகர்வுறுத்தக் காண்டம், போக்கிய காண்டம் - நுகர்வுக் காண்டம். மிச்சிரம் - கலப்பு.

    வைந்தவம் - விழியியம். மாயேயம் - மாயையம். பிராகிருதம் -மூலியம், முதனிலையம்.

    நாதாந்தம் - ஓதை முடிபு, ஓதைக் கடப்பு.

    நாதம் என்னும் வடசொல்லும், சங்கநாதம் சிங்க(கொம்பு) நாதம் என்று ஓசைப்பொருளில் வழங்குதல் காண்க.

    பிரணவம் - இமிழி, இமிழொலி, ஓங்காரம்.

    சமஷ்டிப் பிரணவம் - தொகுநிலை யிமிழி.

    வியஷ்டிப் பிரணவம் - வகுநிலை யிமிழி.

    ஞானம் - அறிவு. ஞேயம் - அறிபொருள். ஞாதுரு - அறிவோன், அறிநன். ஞானி - அறிவன்.

    வியக்தம் - வெளிப்பட்டது. அவ்வியக்தம் - வெளிப்படாதது. சூனியம் - சுன்னையம், இன்மம், வெறும்பாழ்.

    ஆதாரம் - நிலைக்களம், பற்றுக்கோடு. ஆதேயம் -  நிலைக் களவன், பற்றுக்கோடன்.

    வியாபி - வியலி. வியாபகம் - வியலம். வியாப்பியம்-வியலியம்.

    அதிட்டித்தல் - நிலைக்களங் கொள்ளுதல்.

    சேட்டி - தொழிற்படு. சேட்டிப்பி - தொழிற்படுத்து.

    பாவகம் - கோடிப்பு. வைராக்கியம் - பற்றின்மை. அவை ராக்கியம் - பற்றுடைமை.

    தீத்தல் = எரித்தல், கருக்குதல். தீ = ஒளி, விளக்கு. தீக்கை = அறியாமையை அல்லது மாசைப் போக்கி அறிவுகொளுத்துதல். திருநீறு மாசெரிந்து சாம்பலான நிலையைக் குறிப்பதே. தீக்கை - தக்ஷா (வ.).

    முத்தீக்கை : சமயம் - சமயம். விசேஷம் - சிறப்பு. நிர்வாணம் -அவிப்பு .

    கிரியாவதி - வினைமுறை. ஞானாவதி-நினைமுறை. நிராதாரம் -நேரடி. சாதாரம் - வாயில்வழி.

    ஆசாரி யாபிஷேகம் - ஆசிரியத் திருநீராட்டு.