"அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமாய் |
|
ஆனந்த பூர்த்தியாகி |
|
அருளொடு நிறைந்ததெது தன்னருள்
வெளிக்குளே |
|
அகிலாண்ட கோடி யெல்லாம்
|
|
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க்
குயிராய்த் |
|
தழைத்ததெது மனவாக்கினில் |
|
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம் |
|
தந்தெய்வம் எந்தெய்வமென்
|
|
றெங்குத் தொடர்ந்தெதிர் வழக்கிடவும்
நின்றதெது |
|
எங்கணும் பெருவழக்காய் |
|
யாதினும் வல்லவொரு சித்தாகி
யின்பமாய் |
|
என்றைக்கு முள்ளதெதுமேற் |
|
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுவது |
|
கருத்திற் கிசைந்ததுவே |
|
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவும் |
|
கருதியஞ் சலிசெய்குவாம்." |
|
(தாயு.
பரசிவ. 1) |
"பண்ணே னுனக்கொரு பூசையொரு வடிவிலே |
|
பாவித்தி றைஞ்சவாங்கே |
|
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் |
|
பனிமல ரெடுக்கமனமும்
|
|
நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனின் |
|
நாணுமென் னுளநிற்றிநீ |
|
நான்கும்பி டும்போ தரைக்கும்பி
டாதலால் |
|
நான்பூசை செய்யல்முறையோ
|
|
விண்ணே விணாதியாம் பூதமே நாதமே
|
|
வேதமே வேதாந்தமே |
|
மேதக்க கேள்வியே கேள்வியாம்
பூமிக்குள் |
|
வித்தே யவித்தின்
முளையே |
|
கண்ணே கருத்தேஎன் எண்ணே யெழுத்தே
|
|
கதிக்கான மோனவடிவே |
|
கருதரிய சிற்சபையி லானந்த நிருத்தமிடு |
|
கருணாகரக் கடவுளே." |
|
(தாயு. கருணா.
6) |
|