மணமகன்: | மணமகள்: | (R) துரையாண்டான் (துரைசாமி) சேலம் ஈரோடு மின்சாரப் பாதீட்டுக் குழும்பு, மட்டிட்டது. | (A) கலைமகள் (சரசுவதி) திரு வீரப்பப்பிள்ளை மகள் |
அன்புடையீர், நிகழும் வள்ளுவராண்டு 1987 வைகாசித்திங்கள் 29ஆம் நாள் (11-6-1956) திங்கட்கிழமை காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள், சேலம் கிச்சிப்பாளையம் அரங்கநாதம் பிள்ளை தெரு, 41ஆம் எண் இல்லத்தில் நடக்கும் எங்கள் திருமணத்திற்கு, தாங்கள் தங்கள் சுற்றத் தாருடன் வருகை தந்து மன்றலைச் சிறப்பிக்கப் பணிவுடன் வேண்டுகின்றோம். சேலம், 7-6-1956. | தங்கள் அன்புள்ள, துரையாண்டான் கலைமகள் |
போலிகை 7 தமிழ் வாழ்க! | தமிழ்க்கொடி வெல்க! |
அன்பர்காள், நிகழும் வள்ளுவராண்டு 1987 நேர்வான் (சித்திரை) மாதம் 20ஆம் நாள் (2-5-'56) அறிவன் (புதன்) கிழமை காலை 8 மணிக்கு, வேலூர் மிதிவண்டிச் செப்பனீட்டாளர் திருவாளர் வடிவேலனார்க்கும் | குடியேற்றம் (குடியாத்தம்) மருத்துவச்சியார் திருவாட்டியார் வள்ளியம்மையார்க்கும் |
வேலூர் மணமண்டபத்தில் 'கீழை உயிரீட்டு வைப்புறுதி' (Oriental Life Insurance) முகவர் (Agent) திருவாளர் அண்ணல்தங்கோ நடத்தி வைக்கும் தமிழ்த்திருமணத்திற்கு, தாங்கள் தவறாது குடும்பத்துடன் வந்திருந்து, மணமக்களை வாழ்த்திருயருளப் பெரிதும் வேண்டு கின்றேன். வேலூர், 25-4-'56. | தமிழ்த் தொண்டன், நக்கீரன் |
|