பக்கம் எண் :

49



போலிகை 4
 

வாழ்க்கை ஒப்பந்த அழைப்பிதழ்

பேரன்பீர்,

    நிகழும் வள்ளுவராண்டு 1987 வைகாசிமாதம் 18ஆம் நாள் (31-3-56) வியாழக்கிழமை காலை 8-15 மணிக்குமேல் 9 மணிக்குள்,

வினைதீர்த்தான் கோயில் (வைத்தீசுவரன் கோயில்)
'தமிழன்' ஆசிரியர் தோழர்
இளஞ்செழியனு
க்கும்,
மயிலாடுதுறைத் (மாயவரம்) தோழியர்
தாமரைக்கண்ணி
க்கும்

மயிலாடுதுறைத் 'தமிழர் முன்னேற்றக் கழக' அலுவலகத்தில், அறிஞர் அண்ணாதுரை தலைமையில் சீர்திருத்தத் திருமணம் நடை பெறும். அவ்வமயம், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் தோழர் அன்பழகனார் (எம்.ஏ.) 'தமிழர் திருமணம்' என்னும் பொருள்பற்றிப் பேசுவார்.

    தாங்கள் தமருடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகின்றேன்.

தோழன்,
நெடுஞ்செழியன்.

போலிகை 5 

வாழ்க்கை ஒப்பந்த அழைப்பிதழ்

அன்பரீர்,

    நிகழும் வள்ளுவர் ஆண்டு 1987 வைகாசித்திங்கள் 30ஆம் நாள் (12-6-56) செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு, நானும் மறைக் காட்டுப் (வேதாரணியம்) 'பெரியார்' துவக்கப்பள்ளி ஆசிரியை பூம் பாவையும், சேலம் அறிவுடைநம்பி தெருவில் 'பகுத்தறிவு நிலையத்தில்', ஈ.வெ.ரா. பெரியார் தலைமையில் செய்துகொள்ளும் வாழ்க்கை ஒப்பந்தத் திற்கு, தாங்கள் தமருடன் வந்திருந்து எங்களை வாழ்த்தியருளுமாறு தாழ்மையாய் வேண்டிக்கொள்கின்றோம்.

    திருமணத்தின்போது, சேலங் கல்லூரி, வரலாற்றுத்துறைத் தலைவர் திரு. சொக்கப்பா அவர்கள் (எம்.ஏ., எல்.தி.), 'திருமணச் சீர்திருத்தம்' என்னும் பொருள்பற்றிப் பேசுவார்கள்.   

சேலம்,
12.2.'56

மதியழகன்
 பூம்பாவை