பக்கம் எண் :

48



போலிகை 2
 

திருமண அழைப்பிதழ்

ஐயன்மீர், அம்மைமீர்,

    இறைவன் திருவருளை முன்னிட்டு, நிகழும் வள்ளுவராண்டு 1987 தை மாதம் 21ஆம் நாள் (3-2-1956) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்குமேல் 8.45 மணிக்குள், மகர ஓரையில்,

என் இளைய மகன்
நீடுவாழி
 சீராளனுக்கும்

கண்ணமங்கலம் பண்ணையார் திருமான் கழறிற்றறிவார்
அவர்களின் மகள் நிறைசெல்வி
கயற்கண்ணி
க்கும்

பெரியோரால் உறுதி செய்யப்பட்டபடி, இவ்வூர்ப் பொய்யா மொழி யார் தெருவில், 23 என்னும் எண்ணுள்ள என் இல்லத்தில், மதுரைத் தியாகராயர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர், பண்டாரகர் (Dr.) மா. அரசமாணிக்கனார் (எம்.ஏ.,எல்.தி.,எம்.ஓ.எல்.,பிஎச்.டி.) அவர் களைக் கரண ஆசிரியராகக் கொண்டு திருமணம் நிகழவிருப்பதால், தாங்கள் சுற்றஞ்சூழ முற்பட வந்திருந்து திருமணத்தைச் சிறப்பிப்ப துடன் மணமக்களையும் வாழ்த்தியருளுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

முதுகுன்றம் (விருத்தாசலம்),
19-1-1956.

இங்ஙனம்
மகரநெடுங்குழைக்காதன்

போலிகை 3 

திருமண அழைப்பிதழ்

ஐயன்மீர், ஐயைமீர்,

    நிகழும் வள்ளுவராண்டு 1987 பங்குனி மாதம் 8ஆம் நாள் (21-3-1956) அறிவன் (புதன்) கிழமை காலை 8 மணிக்கு,

என் தங்கை
 செல்வி
குயின்மொழியாளு
க்கும்
சென்னைப் பச்சையப்பன் கல்லூரிக் கணித விரிவுரையாளர் செல்வர் கண்டறிவாருக்கும்

இவ்வூர் ஆளவந்தார் தெருவில் 19 என்னும் எண்ணுள்ள வீட்டில், திருச்சிராப்பள்ளித் 'தமிழர்நாடு' ஆசிரியர், திருவாளர் கி.ஆ.பெ. உலக நாயகம் (விசுவநாதம்) அவர்கள் நடத்திவைக்கும் திருமணத்திற்கு, தாங்கள் உற்றார் உறவினருடன் வந்திருந்து, அப் புது வாழ்க்கையரை வாழ்த்தியருளுமாறு பன்முறை வேண்டுகின்றேன்.

திருவரங்கம்,
11-3-56.

அன்பன்,
 சீர்திருத்தநம்பி