திருச்சிற்றம்பலம் திருமண அழைப்பு "குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க" | அன்புடையீர், எல்லாம் வல்ல இறைவன் திருவருளால், நிகழும் 1131ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29ஆம் நாள் (11.6.1956) திங்கட்கிழமை புனர்பூசநாள் காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள், கடக நற்பொழுதில், திருவாளர் ஆ. இராசகோபால் பிள்ளை அவர்கள் திருமகன் திருவளர் செல்வன் அறிவியல் இளைஞன் (B.Sc.) கலியாணசுந்தரம் என்னும் மணவழகனுக்கும் | திருவாளர் சுப்பையாப் பிள்ளைஅவர்கள் திருமகள் திருவளர் செல்வி வடிவழகியம்மைக்கும் | சென்னைப் பவழக்காரத்தெரு, 6ஆம் எண் திருவரங்க நிலையத்தில் நடைபெறும் திருமணத்திற்கும், அதைச் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், தாங்கள் உற்றார் உறவினருடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தும் படி வேண்டிக் கொள்கிறோம். அன்புள்ள, | ஆ. இராசகோபால்பிள்ளை, | வ. சுப்பையாப் பிள்ளை, | ராலீசு இந்தியா மட்டிட்டது (Ltd.) சென்னை. | திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர். |
|