பக்கம் எண் :

106தமிழர் வரலாறு-1

திருவள்ளுவரும், நடவாமுறை அறத்தைக்கூறாது நடைமுறை யறத்தையே கூறுவதால்,கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலவின்பமும் ஒருங்கே தரும் ஒண்டொடி, அருள் நிறைந்தஇறைவனால் ஆடவனுக்கு அளிக்கப்பெற்றவாழ்க்கைத்துணை யென்று கண்டு, அவளோடு கூடிஅறவழியில் இன்பம் நுகர்ந்து, ஒல்லும் வகையால்அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செய்யின்,இம்மைச் சிற்றின்பமும் மறுமைப் பேரின்பமும்அடையலாம் என்பதை யுணர்த்தற்கே, இன்பத்துப்பாலை இறுதியிற் கூறினார். இதை யுணராது,துறவறத்தினாலேயே வீடுபேறுண்டாம் என்னும் ஆரியக்கொள்கையை நம்பும் சிற்றறிவாளர்,இன்பத்துப்பாலைப் பழிக்கவும் திருவள்ளுவரைக்கண்டிக்கவும் துணிவர்.

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின்புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்" 

(குறள்46)

என்னுங் குறளை நோக்குக.

இனி, அகப்பொருள் போன்றேபுறப்பொருளும் அரசனையே தலைமையாகக் கொண்டு,அவன் மறவாழ்க்கைக்குரிய போர்த் தொழிலைஎழுதிணையாக வகுத்துக் கூறுகின்றது. அவற்றுள் வெட்சி,வஞ்சி, உழிஞை, தும்பை என்னும் நான்கும் போர்வகைகளையும், வாகை போர் வெற்றியையும், காஞ்சிபோரால் விளங்கித் தோன்றும்உலகநிலையாமையையும், பாடாண் போர் வெற்றியால்ஏற்படும் புகழையும் பற்றியனவாம்.

தமிழ்ப் பொருளிலக்கணம் காதலையும்போரையுமேபற்றிக் கூறுவதால், மற்றப்பொருள்களெல்லாம் விடப்பட்டுள்ளன வென்றும்,அரசனும் படைமறவருமே போர்புரிவதால் பிறர்தொழில்களை யெல்லாம் அது தழுவவில்லை யென்றும்,சிலர் கருதிக் குறைகூறாவாறு, வாழ்க்கைப்போராட்டத்தில் மக்கள் மேற்கொள்ளும்எல்லாத் தொழில் வெற்றிகளும் வாகைத் திணையுள்அடக்கப்படுகின்றன. அது,

"அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்
பாலறி மரபின் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோ டாங்கெழு வகையின்
தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்" 

(1021)

என்று தொல்காப்பியமும்,