பக்கம் எண் :

தமிழர் வரலாறு-1109

பண் (7 இசை), பண்ணியல் (6 இசை), திறம் (5இசை), திறத்திறம் (4 இசை) எனப் பண்களைநால்வகையாக வகுத்திருந்தனர்.

நரம்புக்கருவிகள் முந்தியாழ்(ஆதியாழ், பெருங்கலம், ஆயிர நரம்பு), வில்யாழ்(பல நரம்பு), பேரியாழ் (21 நரம்பு),சுறவியாழ்(மகரயாழ்19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு),முண்டகயாழ் (9 நரம்பு), செங்கோட்டியாழ் (7 நரம்பு),சீறியாழ் (4 நரம்பு), சுரையாழ் (1 நரம்பு) எனப்பலவகைய. ஆயிரம் என்றது பெருந்தொகையை. உறையென்றது உறையினாலேயே செய்யப்பட்ட தாளக்கருவியை.

நரம்புக்கருவி இசைவளர்ச்சியின்உச்சநிலையைக் காட்டும். யாழ்த்தண்டின் கடையில்யாளித்தலை யுருவம் பொருத்தப்பட்ட தனால்,நரம்புக்கருவி யாழ் எனப் பெயர் பெற்றது.மடங்கல்(சிங்க) உடம்பும் யானைத்துதிக்கைபோன்ற நீண்ட மூக்குங் கொண்ட யாளி என்னும்விலங்கினம், குமரிநாட்டிற்கே யுரியதாகும்.

யாழிசையின்பத்தில் ஆழ்ந்து ஈடுபட்டஅசுணம் என்னும் விலங்கும் குமரிநாட்டிற் குரியதே.அது பறவையோ என்று சிலர் ஐயுறுகின்றனர். ஆயின்,அதை அசுணமா என்று சிந்தாமணி கிளந்தே கூறுகின்றது.

"இன்னளிக் குரல்கேட்ட வசுணமா"(சீவக.1602). நற்றிணை "அசுணங் கொள்பவர்கைபோல்" (304) என்று இனச்சிறப்புப் பெயரையேகுறித்திருப்பினும், "இசையறி விலங்காகிய அசுணமானை" என்று, ஒரு மான்வகையாகவே நாராயணசாமிஐயர் உரை வரைந்திருக்கின்றார். மானிறைச்சிஎல்லாராலும் விரும்பப் படுவதாலும், மான்வேகமாய்ஓடும் விலங்கினமாதலாலும், அசுணம் ஒரு சிறந்தமான்வகையாகவே இருந்திருக்கலாம்.

யாளிக்கும், வலிமையும் தோற்றப்பொலிவும் மட்டுமன்றி, இசையுணர்ச்சியும்இருந்திருக்கலாம்.

ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை,திரிகோணப் பாலை என்னும் பண்திரிப்பு முறைகள்,முறையே, முழுவிசையும் அரையிசையும் காலிசையும்அரைக்காலிசையும் பற்றியவாயின், தமிழிசைக்குஉலகில் இன்றும் இணையில்லை யென்றே சொல்லலாம்.

நாடகம்

இயற்றமிழ்க்குரிய புலனெறிவழக்கத்தில் நாடக வழக்கமும்கலந்திருப்பதனாலும், தலைக்கழகத்து இலக்கணம்மாபிண்ட மென்னும் முத்தமிழிலக்கணமாகவேவழங்கியதாலும், நாடகமும் அக்காலத்துவளர்ச்சியடைந்திருந்தமை அறியப்படும்.