பக்கம் எண் :

112தமிழர் வரலாறு-1

அதை வென்று தனக்குஅடிப்படுத்தியதாகக் கருதி, அதற்கு அடையாளமாக,கடற்கரையிலுள்ள பாறை யொன்றில் தன் அடிச்சுவடுகளைப் பொறித்து, அவற்றைக் கடல் தன்அலையால் என்றும் அலசிக் கழுவுமாறு செய்தான்.அதனால், வடிம்பலம்ப நின்ற பாண்டியன்எனப்பட்டான்.

கடலுக்கு அஞ்சின நெடியோன் வேறு; அதற்குமிஞ்சின வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வேறு.

இன்னுமொரு பாண்டியன் கடன்மேற்செல்லும்போது, கடல் கொந்தளித்தது. அதைக் கடல்தலைவனின் வினையாகக் கருதி, அதையடக்க ஒரு வேலைவிட்டெறிந்தான். கொந்தளிப்பு இயற்கை யாகஅடங்கிற்று. ஆயின், அது வேலெறிந்ததன்விளைவென்றே அப்பாண்டியனும் அவன் உழையரும்கருதினர். பொதுமக்கள் அதனால் என்ன நேருமோ என்றுஅஞ்சியிருத்தல் வேண்டும். சிறிதுகாலத்தின்பின், அவ் வச்சத்திற் கேற்பவே,பாண்டிநாட்டின் பெரும் பகுதியைக் கடல் கொண்டது.அது கி.மு.5000 போல் நிகழ்ந்ததாகும். அதனையே,

"அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" 

(சிலப்.11:17-20)

என்று இளங்கோவடிகள் கூறுகின்றார்.

"முன்னொரு காலத்துத் தனது பெருமையினதளவை அரசர்க்குக் காலான் மிதித்துணர்த்தி,வேலானெறிந்த அந்தப் பழம்பகையினைக் கடல்பொறாது, பின்னொரு காலத்து அவனது தென்றிசைக்கண்ண தாகிய பஃறுளி யாற்றுடனே, பலவாகியபக்கமலைகளையுடைய குமரிக்கோட்டையும்கொண்டதனால், வடதிசைக்கண்ணதாகிய கங்கையாற்றினையும் இமய மலையினையும் கைக்கொண்டுஆண்டு, மீண்டும் தென்றிசையை யாண்ட தென்னவன்வாழ்வானாக."

".......கடல் எறிந்து கொண்டஎல்லையளவும் வடபால் தனதாக்கி, மீண்டும்தென்றிசையை யாண்டவென ஒப்பாக்கலு மொன்று.அடியாலுணர்த்தி எறிந்த பகைபொறாது கொள்ளத்தானுங் கொண்டு ஆண்ட தென்னவ னென்க"

என்று அடியார்க்கு நல்லார் இப்பகுதிக்கு வரைந்துள்ள உரையை நோக்குக.