பாண்டியனுக்குப் போன்றேசேரசோழர்க்கும் நாற்படையும் ஐம்பெருங்குழுவும்எண்பேராயமும் ஐவகை யுறுதிச் சுற்றமும் அமைந்தன. மூவேந்தர்க்கும், அரசச் சின்னம்பத்தென்றும் அரசியலுறுப்பு ஏழென்றும்கொள்ளப்பட்டன. முகுடம் (முடி), செங்கோல், மாலை,முத்திரை, குடை, கொடி, முரசு, தேர், யானை, குதிரைஎன்பன பத்துவகைச் சின்னம். கொடியும்முத்திரையும் குறிவடிவில் ஒன்றேனும், பொருள்வடிவிலும் பயன்பாட்டு வகையிலும் வேறாம். நாடு, குடி, பொருள், படை, அரண், அமைச்சு,நட்பு என்னும் ஏழும் அரசியலுறுப்பாம். நாடில்லாமற்குடியில்லையாதலின், நாட்டைக் குடியுள் அடக்கி, "படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையான் அரசருள் ஏறு" | (குறள்.381) |
என்றார் திருவள்ளுவர் . ஆயினும்,நாடும் ஓர் உறுப்பாம் என்பதை அறிவித்தற்கே, அதை74ஆம் அதிகாரத் தலைப்பாக்கினார். நாடில் லாமற்குடியில்லை; ஆயின், குடியில்லாமல் நாடுண்டு. அரசனின் சின்னம் (அடையாளம்) வேறு;அரசனின் அரசிய லுறுப்பு வேறு. அரசியலுறுப்பு ஏழும்சேர்ந்து ஓர் உடம்பும், அரசன் அதன் உயிரும் ஆகும். "மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்" | (புறம். 186) |
உறுப்புஞ் சின்னமும் ஒன்றென மயக்கி,பெயர்(நாமம்), நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை,முரசு, தார், கொடி என்று திருவாசகமும், "ஆறு மலையும் யானையுங் குதிரையும் நாடு மூரும் கொடியு முரசும் தாருந் தேருந் தசாங்க மெனப்படும்" | |
என்று திவாகர வுரிச்சொற்றொகுதியும், மலை, யாறு, நாடு, ஊர், மாலை, குதிரை,யானை, கொடி, முரசு, தானை என்று சூடாமணியுரிச்சொற் றொகுதியும், யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தேர்,முரசு, தார், கொடி என்று வெண்பாப் பாட்டியலும்,
|