கிடவாது வெட்டவெளியான நிலமெல்லாம், கண்ணிற்குப் புலனான தனால், புலம் எனப்பட்டது. "புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்" | (புறம். 109:2) |
"புலங்கெட விறுக்கும் வரம்பில் தானை" | (புறம்.16:9) |
என்னும் அடிகளை நோக்குக. விளைநிலத்திலும் வீட்டிலுமுள்ள கூலங்களை எலிகள் தின்று கெடுத்ததனால், அவற்றைக் கொல்லக் காட்டுப்பூனையையும்; ஆடுகளை நரிகள் பிடித்துத் தின்றதனால், அவற்றை விரட்டி மந்தையைக் காக்கக் காட்டு நாயையும் வீட்டிற் பழக்கினர். நிலத்திற் பூசிப்பூசி மெத்தென்று நடப்பதால், பூனை பூசை யெனப்பட்டது. பூசு-பூசை-பூனை-பூஞை. நாய்க்கு ஆட்பற்றுப் போல் பூனைக்கு இடப்பற்று மிகுந்திருப்பதால், தொல்வர வுணர்ச்சி மிக்க ஆண்பூனை பருத்துக் கொழுத்த நிலையில் இன்றும் காட்டிற்குச் சென்று, கண்டார் அஞ்சத்தக்க வெருகாகிவிடுகின்றது.
"வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்" | (தொல்.மர.19) | "வெருக்கு விடையன்ன வெருணோக்கு" | (புறம்.324) | "பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரைய" | (புறம்.117) |
என்பவற்றால், தமிழகத்திற் காட்டுப்பூனை தொன்றுதொட்டு இருந்து வருவதை அறியலாம். இனி, மேலையாரியப் பூனைப் பெயர்கள் தமிழ்ச்சொல்லின் திரிபாயிருத்தலால், தமிழகத்தினின்றே பூனை ஐரோப்பாவிற்குச் சென்றதாகத் தெரிகின்றது. பூசை-E. puss-pussy, MLG. pus, Norw, puse, Du, poes, இதன் மூலம் தெரியவில்லை யென்றும், ஒருகால் முதற்காலத்தில் இது ஒரு பூனை விளிச்சொல்லா யிருந்திருக்கலா மென்றும், எருதந்துறை (oxford) ஆங்கில அகரமுதலி கூறுகின்றது. நெல்லை வட்டாரத்தில் இன்றும் பூனையைப் பூசுபூசு என்று அழைப்பதைக் காணலாம். கொத்தி (1.)-E.cat, OE. catte, ME. catt(e), LL. cattus, catta, ONF, cat, F.chat, ON. kottr, OHG.Kazza. கொத்தை=குருடு, குருடன். பூனைக்குப் பகலிற் சரியாகக் கண் தெரியாமையாற் கொத்தி யெனப்பட்டது. இதன் விரிவை என் 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி'யிற் காண்க. முல்லைநிலத்தை உழக் கலப்பையையும், வேட்டையாடற்கு வளரி-வணரி (வளைதடி), கவண், வில் முதலிய கருவிகளையுங் கையாண்டனர். கல்லோடு மரம், கொம்பு, மருப்பு (தந்தம்), எலும்பு முதலியனவும் முதற் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. மாட்டுக
|