பக்கம் எண் :

42தமிழர் வரலாறு-1

களும் தனிப்பட்டபெரும்புலவரின் உயர்நிலைக் கல்வி நிலையங் களும்அமைந்திருத்தல், பெரும்பாலார் எழுதப் படிக்கத்தெரிந்தவரா யிருந்து திருத்தமாகப் பேசுதல்,எல்லாருந் திருந்திய பழக்கவழக் கங்களைமேற்கொள்ளுதல், அழகிய ஆடையணிகள் உடல் மறையஅணியப்படுதல், துப்புரவான காரைவீடுகளும்மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் நேரானபெருந்தெருக்களும் புதைசாலகங்களும் இருத்தல்,ஏந்தான அழகிய வூர்திகள் இயங்குதல், உயர்ந்தஅறுசுவை யுண்டிகள் உண்ணப்படுதல், பலவகை யுயர்ந்தபிறநாட்டு ஐம்புல நுகர்ச்சி யரும்பொருட் கடைகள்அடுத்தடுத்திருத்தல், களவுங் கொள்ளையும்நிகழாவாறு ஊர்காவலர் அல்லும் பகலுங் காத்தல்,கொலையாளிகளையும் பிற குற்றவாளிகளையுந்தண்டிக்கும் அறமன்றமும், திருக்கோயில்களும்துறவியர் மடமும் சொற்பொழி வுக் கூடமும்பட்டிமண்டபமும் உண்மை முதலிய ஏதுக்களால்,நகரங்களும் நகர்களுமே நாகரிகப் பிறப்பிடமாயின.அநாகரிகனை நாட்டுப் புறத்தானென்றும்,பட்டிக்காட்டானென்றும் சொல்வதே, இதைவலியுறுத்தும். நகர மேம்பாடுகள் நகர்களிற்குன்றியிருக்கு மேனும் நாகரிகத்திற் கேதுவானவையே.நாகரிகம் நகரிற் பிறந்ததெனின், நகரத்திற்சிறந்த தெனலாம். பாண்டியன் மதுரை ஒரு நகரம்(மாநகர்). அக்காலத்து நெல்லை (திருநெல்வேலி) ஒருநகர். வைகை மதுரை போன்றதே பஃறுளியாற்றுத்தென்மதுரை.

நாகரிகத்தின் மூளைகுறிஞ்சிநிலத்திலேயே தோன்றியதேனும், அதுமுழுவளர்ச்சி யடைந்தது மருதநிலத்து நகர்ப்பாங்கேயென்றும், குறிஞ்சி நாகரிகமும் முல்லை நாகரிகமும்மருத நாகரிகத்தின் கீழ்நிலைகளே யென்றும்,நெய்தல்நிலை வணிக வளர்ச்சிக்கும் செல்வப்பெருக்கத்திற்குமே ஏதுவென்றும், பாலைநிலை நாகரிகவளர்ச்சியின்றிப் பண்பாட்டிழிபையேகாட்டுமென்றும் அறிதல் வேண்டும்.

மருதநிலக் குமுகாய வாழ்வில், ஒருமனைமணமும் இறப்புவரை பிரியா இல்வாழ்வும்பெரும்பான்மையாயின. ஒருவனால் மணஞ்செய்யப்பட்டமைக்கு அறிகுறியாகப் பெண்ணின்கழுத்திற் பொற்றாலி கட்டப்பட்டது. பன்மனைமணமும் தீர்வை முறையும் தொடர்ந்தன வேனும்,தொல்லை மிகுதியும் பண்பாட்டிழிபும்பற்றி அவைதாழ்வாகக் கருதப்பட்டன. ஊர்த் தலைவனும் அவனுக்குமேற்பட்ட அரசரும், இன்பச் சிறப்பு நோக்கிப்பன்மனை மணத்தையே கடைப் பிடித்தாரேனும்,அதன்இழிவை அவரது தெய்வத்தன்மையான அதிகாரம்முற்றிலும் மறைத்துவிட்டது. மருதநிலத்து நிலையானகுடியிருப்பும் பயிர்த்தொழிலிற் குடும்பக்கூட்டுழைப்பும், கணவன் மனைவியர் காதலை வளர்த்துமண வாழ்க்கையை நீடிக்கச் செய்தன. உயிருக்கின்றியமையாத உணவுப்