பொருள்கள் ஏராளமாகக்கிடைத்ததனால், வயிறாரவுண்டு இன் புறவும், உழைக்கஇயலாதவர்க் குதவி அறம் வளர்க்கவும் ஏது வாயிற்று. பொற்கால மருதநில ஆட்சித்துறையில்,தனியூராட்சி போய், ஒரு பேரூரும் அதனைச் சூழ்ந்தஉட்கிடை போன்ற சிற்றூர்களுஞ் சேர்ந்தகூட்டூராட்சி தோன்றி, பின்னர் அதற்கும்மேற்பட்ட குறுநில மன்னராட்சி ஏற்பட்டிருத்தல்வேண்டும். தனியூராட்சி என்பது, எல்லையளவில்இக்காலத்து நாட் டாண்மைக்காரன்,பெரியதனக்காரன், பட்டக்காரன், அம்பலகாரன்,மூப்பன், தலைவன், கவுண்டன், குடும்பன் முதலியபெயர்களாற் குறிக்கப்படும் குடித்தலைவன் ஆட்சிபோன்றது. ஆயின், அதிகார அளவில் பிற்காலத்துவேந்தன் ஆட்சி போன்றே கோன்மை (Sovereignty)கொண்டது. கூட்டூராட்சி என்பது, கிரேக்க நாட்டுநகர நாடு (City State)போன்றது. ஆதலால், அதுவுங் கோன்மை கொண்டதே.குறுநில மன்னராட்சி என்பது, பாரி காரி முதலியவேளிராட்சி போன்றது; சின்னூறூர்களும்பன்னூறூர்களுங் கொண்டது. அம் மன்னரின் அரசுவீற்றிருக்கைக ளெல்லாம் நகர்கள். அமைச்சரும்படைமறவரும் அவருக்குத் துணையாயிருந்தனர். மருதநிலக் குடியிருப்புப் போன்றே,முல்லை குறிஞ்சிநிலக் குடியிருப்புகளும் ஆட்சியில்மாறுதலடைந்தன. அதாவது, தனியூராட்சி போய்க்கூட்டூராட்சி தோன்றிற்று. படைத்துணை யின்மையாற்குறுநில வாட்சி தோன்றவில்லை. இவ் வாட்சிமாற்றம் பண்டமாற்று, விழாக் காண்டல்,வேட்டையாடல் முதலிய தொடர்புகளால் ஏற்பட்டது.ஆயின், மருதம்போல் நாகரிக வளர்ச்சியடையவில்லை. இதற்கு நில அமைப்பே அடிப்படைக்கரணியம். அதனால், நகரங்களுந் தோன்றவில்லை;ஊர்ப் பெயர்களும் வேறுபட்டன. மருதநிலத்து ஊரேஊரெனப்பட்டது. உர்=உறு. உறுதல் = பொருந்துதல்.உர்-ஊர். உழவுத்தொழிலே நிலத்தொடு பொருந்திநிலையாக வாழ ஏதுவாயிற்று. அதனால், சிற்றூர்பேரூரும், பேரூர் மூதூரும் ஆயின. நகரங்கள்பெருமைபற்றிப் பேரூர் என்றும், முதுமைபற்றி மூதூர்என்றும் சொல்லப்பட்டன. "வாணன் பேரூர்" | (மணிமே.3:123) | "அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்" | (சிலப்.பதி.39) |
முல்லைநிலத்திற் கால்நடைகட்குப்புல்வெளி தேடி அடிக்கடி இடம் பெயரவேண்டி யிருந்தது.அதனாற் கட்டை மண்மேற் கூரை வேய்ந்து,உயரமின்றித் தாழ்வான வீடுகளைக்கட்டிக்கொண்டனர். அதனால் அந் நிலத்தூர் பாடிஎனப்பட்டது. படுத்தல்=தாழ்தல், தாழ்வாயிருத்தல்.படு-பாடு-பாடி. இனி, படு-படி-பாடி என்றுமாம். வீடுகள்செறிந்திருந்ததனால், அவ் வூர் சேரி எனவும்பட்டது.
|