பக்கம் எண் :

46தமிழர் வரலாறு-1

அவரைப்பதினெண்குடி மக்கள் என்பது மரபு. அக் குடிகளைவின்சிலோ (winslow) அகரமுதலி பின்வருமாறு கூறும்:

வண்ணான்  தச்சன்  கோவிற்குடியான்
நாவிதன் எண்ணெய் வாணிகன் 

(சங்கூதுவோன்)

குயவன் உப்புவாணிகன்  ஓச்சன்
தட்டான்இலைவாணிகன் வலையன்
கன்னான்  பள்ளி பாணன்
கற்றச்சன் பூமாலைக்காரன்
கொல்லன் பறையன்

இவற்றைப் பின்வருமாறுங் கூறலாம்:

வண்ணான்  உமணன்  மருத்துவன்
மஞ்சிகன் தச்சன் கணியன்

(முடிதிருத்தி) 

(மரக்கொல்லன்) 

கிணையன்

பறம்பன்  கல்தச்சன் 

(பறையன்)

(தோலின்துன்னன்) 

தட்டான்  துடியன்
உவச்சன் 

(பொற்கொல்லன்)

பாணன்
கோலிகன்பணிசெய்வோன் கூத்தன்

(நெசவாளன்) 

குயவன் 

செக்கான்

கன்னான் செம்புக் காலத்திலும்,இருப்புக் கொல்லன் இரும்புக் காலத்திலுமேதோன்றியிருத்தல் கூடும்.

"துடியன் பாணன் பறையன் கடம்பனென்
றிந்நான் கல்லது குடியு மில்லை" 

(புறம்.335)

என்னும் புறநானூற்றுக் கூற்று, ஒருகுறிப்பிட்ட இடம்பற்றியதே யன்றிப்பொதுப்படக் கூறியதன்று.

குடிமக்கள் என்னுஞ் சொல், நிலையானகுடிகளாகிய உழவர்க் குப் பல தொழிலுஞ் செய்துமக்கள்போல் உதவுபவர் என்று பொருள் படுவது.குடிமக்கள் எல்லாருள்ளும் விதப்பாகக் குடிமகன்என்று இன்றுஞ் சொல்லப்படுபவன் முடிதிருத்தாளனே.

குடிமக்கள் பலரும் தம் தொழிற்குஅல்லது தொண்டிற்கு உரிய கூலியைக் களத்திலும்உழவர்மனையிலும் வாங்கி வந்தனர்.

வயலிலும் வாய்க்காலிலும் மீன்பிடிக்கப்படுமேனும், கடுங் கோடைக் காலத்தில்ஆறுங் குளமும் வற்றிவிடுமாதலாலும், களர்