மருதநிலப்பேரூர்களில் பண்டமாற்றியர் அல்லது வணிகர்தோன்றியிருப்பர். ஆண்டுதோறும் பல கூலங்களும்புதிதாகவும் ஏராளமாகவும் விளைந்த தால், முந்தினஆண்டில் மீந்துபோன கூலங்களை வாங்கவும்,அவற்றிற் கீடாக உழவர்க்கு வேண்டிய பிறநிலத்துப்பொருள்களைக் கொண்டுவந்து தரவும், உழவரினின்றேஒருசிலர் வணிகராகப் பிரிந்திருத்தல் வேண்டும்."யாண்டுகழி வெண்ணெல்" என்று ஐங்குறுநூற்றுப்பாடல் கூறுவதை நோக்குக. "ஒன்றிரண்டாம்வாணிகம்" என்பதும் வணிக முயற்சியை ஊக்கியிருத்தல் வேண்டும். வணிகருக்குப்பின் பல்வேறுகைத்தொழிலாளர் படிப்படியாகத் தோன்றலாயினர்.நாகரிகமும் அரசியலும் வணிகமும் வளர வளர,நூற்றுக்கணக்கான பணிகளும் அலுவல் களும்புதிதுபுதிதாக ஏற்பட்டன. அறிவு வளர்ச்சியடைந்ததனால், பூசகர் கல்வி கற்பிக்கும்ஆசிரியத் தொழிலும் மேற்கொண்டனர். உழவு,வணிகம், காவல், கல்வி என்னும் நாற்பெருந்தொழில்பற்றி, மருதநில மக்கள் உழவர், வணிகர்,அரசர், பார்ப்பார் என நால்வகுப்பாராய்அமைந்தனர். பதினெண் கைத்தொழிலாளரும்உழவர்க்குப் பக்கத் துணைவராகக்கருதப்பட்டதனால், அவருள் அடக்கப்பட்டனர். பண்ணியம் = பண்ணப்பட்ட பொருள்,விற்பனைப் பண்டம். (மதுரைக்.405) பண்ணியம் - பண்ணியன் - பண்ணிகன் -பணிகன் - வணிகன்= பல பண்டங்களை விற்பவன்.வணிகன் - வாணிகன். பார்ப்பான் = நூல்களைப் பார்ப்பவன்.இது 'அன்' சாரியை அல்லது 'அனன்' ஈறு பெற்றுப்பார்ப்பனன் என்றும் நிற்கும். முக்காலவினைமுற்றும் இங்ஙனம் ஈறு கொள்ளும். எ-டு.பார்த்தனன் - இறந்த காலம் பார்க்கின்றனன் - நிகழ்காலம் பார்ப்பனன் - எதிர்காலம் "படைப்பனர்" (சிலப்.10:134),"விரைவனன்" (புறம்.150) என்னும் எதிர்காலவினைமுற்றுகளை நோக்குக. பார்ப்பனன் என்பதுபிராமணன் என்னும் சொல்லின் திரிபன்று.கல்வித்தொழில் செய்யும் ஆசிரியரும் சமயகுரவரும் போன்ற தமிழரையெல்லாம்பார்ப்பாரென்றே சொல்ல வேண்டும். பிராமணரைஇச் சொல்லாற் குறிக்க வேண்டின், ஆரியப்பார்ப்பார் (அல்லது பார்ப்பனர்) என்றுஅடைகொடுத்தே கூறவேண்டும். அரசர் என்னுஞ் சொல் பின்னர்விளக்கப்படும்.
|